வாசிப்பதன் மேன்மை

 வாசிப்பு ஒரு மனிதனை மேண்மையடையச் செய்கின்றது. அதனால் அனிதனுக்கு வாசிப்பு முக்கியமானதாகின்றது இந்த எலகில் வாசிப்பை நேசிக்காதவன் பூரணமற்றவன் என்றே கூறமுடியும். வாசிப்பின் மூலம் இவ்வுலகில் காம் மேன்மையுடன் வாழ முடியும். எனவே வாசிப்பின் மேன்மை பற்றி நோக்குவது சாலச் சிறந்தது.



                            ஒவ்வொரு மனிதனது முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் படிப்பினையாக அமைவது கல்வியே என்றால் அது தவறாகாது அதுவே சரியானதாகும் அல்லது ஆணிவேர் எனலாம். கல்வி என்பது கரைகான முடியாத செல்வமாகும். அப்படி இருக்கையில் கல்வியானது பிழையாகும் சிந்தித்துப் பாருங்கள். அவ்வாறான கல்வியை பெறுவதற்கு யாருக்கும் தடையில்லை. 

                                தவறாத வாசிப்பு பழக்கத்தின் மூலம் எமக்குள் கல்வியை விருத்தியாக்கிக் கொள்ள முடியும். எனவே வாசிப்பே அச்சாணியாக அமைகின்றது அக் கல்வியின் மூலம் தனி மனித வாழ்வு நெறிப்படுத்தப்படுகின்றது. அதுவே அவன் வாழும் இடத்தினையும் வளர்ச்சிக்கான அடிப்படையாக அமைகின்றது.

                                      இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பது எமது முன்னோர் கூறிய அறிவுரையாகும். ஒரு மனிதனின் இளமைப் பருவத்தே கற்கும் கல்வியானது பசுமரத்தாணி போன்று நன்றாகவே பதியும் நாம் கற்க வேண்டியதனை கற்றுத்தேற வேண்டியது அவசியமானதாகும்.

                                   கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு வாழ்க்கை சிறப்படைய வாசிப்புத் திறன் வேண்டும். வாசிப்பதன் மூலமே கற்க முடியும். வாசிப்பு பழக்கம் இல்லாதவன் வாழ்வில் வாழ்க்கை இருள் நிறைந்ததாகவே இருக்கும். பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் பரகும் அன்னப் பறவை போல எமக்கு தேவையான அறிவுசார் விடயங்களை கொண்ட நூல்களை வாசிப்பதன் மூலம் எமது அறிவு பன்மாடங்காகின்ஙதே தவிர ஒரு போதும் தாழ்ந்து விடப்போவதில்லை...

                                    நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து உரிய காலத்தில் கற்றுக் கொள்வது சிறந்ததுவே. இதனால் எதிர்பார்த்த பலனை பெற்றுக் கொள்வதோடு அறிவினையும் விருத்தி செய்து கொள்ள முடியும். தொட்டளைந்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைந்தூறும் அறிவு என்பதற்கமைய ... மணற்கேணியானது தோண்ட தோண்ட நீரானது ஊறுவது போன்று சிறந்த நூல்களை கற்பதன் மூலம் அறிவானது ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும்.



                               நூல்களை வாசிப்பதன் வாயிலாக சொல் வளம் பெருகும்கிரகிக்கும் திறன் மேம்படும் மொழியாற்றல் விருத்தியடையும். பல்துறை ஆற்றல் விருத்தி பெறும். அதுமட்டுமன்றி ஒவ்வொருவருக்கும் நெகிழ்வானதுமகிழ்சிசயானதுமான மனோநிலை ஏற்படும்.அத்துடன் நல்ல சிந்தனைமனித நடத்தைமனப்பாங்கு போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்..

                                            வாசிப்பதன் மூலம் மன ஒருமைப்பாடுஞாபக சக்தி என்பன வளரும் நன்மை தீமைகளை ஏற்றுக் கொள்ளல்வெற்றி தோல்விகளை சமமாக மதித்தல் பிரச்சினைளை தீர்க்கும் திறன் என்பன வளச்ச்சியடையும் இவ்வகையில் வாசிப்பானது மனிதனை வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழகாட்டுகின்றது எனலாம். இப் பறந்த உலகிலே அறிவுலக மேதைகள் உலகம் போற்றும் தலைவர்கள்உத்தமர்கள் என்போரை உருவாக்கிய பெருமை வாசிப்பிற்கு உள்ளது. 

                             இதற்கு உதாரணமாக ஆபிரகாம் லிங்கன் மற்றும் அப்துல்கலாம். மகத்துமா காந்தி என பலரையும் குறிப்பிடலாம்.. ஆபிரகாம் லிங்கன் நூல்களை இரவல் வாங்கி வாசித்து தனது வாழ்வில் உயர்ந்து அமெரிக்காவின் ஜனாதிபதியாக உயர்ந்தமை வாசிப்பின் மேன்மையை வெளிப்படுத்துகின்றது.. வாசிப்பு மனிதனை பூரணப்படுத்துகின்றது.....

கருத்துரையிடுக

0 கருத்துகள்