அந்தப் பாடசாலையின் ஒன்பதாம் தர வகுப்பாசிரியர் ரமணன் கொஞ்சம் வித்தியாசமானவார். மாணவர்கள் உண்மையான கல்வியை பெற வேண்டும் என்பதில் அக்கரையாய் இருந்தார். அதனால் தான் பாடங்களை நடத்துவதோடு நிறுத்திக் கொள்ளாமல் மாணவர்களின் ஆற்றலை வளர்க்க வேண்டுமென்பதற்காக சில புதுமையான போட்டிகளை அவ்வப்போது நடத்துவார். தலைப்புக்களை வழங்கி பட்டிமன்றம் போல் பேசச் செய்வார். வித்தியாசமான தலைப்பில் கட்டுரைகள் எழுத வைப்பார் நடைமுறை விடயங்களை புரிய வைக்க வினாவிடை அரங்கம் நிகழ்த்துவார்.
அன்று முதல் நாளே,தான் மறுநாள் நடத்தப்போகும் போட்டியைப்பற்றி அறிவித்திருந்தார் “மாணவர்களே! நான் உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு கேள்வி கேட்பேன் யார் சொல்லும் பதில் பொருத்தமானதாக இருக்கிறதோ? அவருக்கு ஒரு அழகான பரிசு கிடைக்கும். நான் என்ன கேள்வி கேட்க போகிறேன் என்பதை நாளைக்கு வகுப்பில் தான் சொல்லுவேன்’’ என்றார்
அவர் கூறியதை கேட்ட ஒவ்வொரு மாணவருக்கும் என்ன கேள்வியை அவர் கேட்கப் போகிறாரோ? என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பு அப்போதே ஏற்பட்டு விட்டது. மறுநாள் ஆசிரியர் வகுப்பறைக்கு வந்து “ நான் கேட்கும் கேள்வி சாதாரணமானதுதான் ஆனால் நீங்கள் கூறும் பதில் முக்கியமாகனது’’ என்று கூறினார்.
ஆசிரியர் மாணவர்களிடம் “ உங்களுடைய கனவு (இலட்சியம்) என்ன என்பதை கேள்வியாக கேட்டார்? ” மணவர்கள் மகிழ்ச்சியுடன் பதில் கூறத் தொடங்கினார்கள்.. முதலாவது மாணவன் நான் வைத்தியராக வர வேண்டும் என்று நினைக்கிறேன் என்றான். இரண்டாவது மாணவி கணனிப் பொறியியலாளராக வரவேண்டுமென்று நினைக்கிறேன். என்றாள் மூன்றாவது மாணவி நான் ஆசிரியராக வரவேண்டும் என்று நினைக்கிறேன் என்றான். ஒரு சில மாணவாகள் தமக்கு லட்சியம் என்னவென்று தெரியாது நான் அம்மாவிடம் கேட்க வேண்டுமென்று கூறினார்கள்.
இறுதியாக கீதா என்ற மாணவி எழும்பி தனது ஆசிரியரிடம் நான் நினைப்பதை சொல்வதற்கு அனுமதி தருவீர்களா? என்று கேட்டாள்... அதற்கு ஆசிரியர் நீ நினைப்பதை தாராளமாக சொல்லலாம் என்று கூறினார்..
கீதா தன்னுடைய இலட்சியத்தை சொல்ல ஆரம்பித்தாள். நான் என்னுடைய மேற்படிப்பில் எந்தப் பாடத்தை படித்து என்னவாகப் போகிறேன். அப்படியென்ற மாதிரியெல்லாம் எனக்கு எந்த கனவும் கிடையாது. நான் எந்தப் படிப்புப் படித்தாலும்,எந்த வேலைக்கு போனாலும் நேர்மையாகவும்,உண்மையாகவும் நடக்க வேண்டுமென்பது எனது இலட்சியமாகும். படிக்கிற காலத்தில் ஒரு ஓழுக்கமான நல்ல மாணவி என்று பெயர் எடுக்க நினைக்கிறேன்.நான் என்னுடைய வாழ்க்கையில் எந்த நிலையில் இருந்தாலும் ஒரு மனிதனாக வாழவேண்டுமென்று நினைக்கிறேன்... இதைத்தான் என்னுடைய இலட்சியமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்று கூறினாள்.
வயதிற்கு மீறி தெளிவுடன் அவள் பேசியதைக் கேட்டு ஆசிரியரும்,மாணவர்களும் ஒன்றுமே பேசாமல் சிறிது நேரம் நின்றனர். பிறகு ஆசிரியர் மாணவர்களே! நீங்கள் ஒவ்வொரு விதமான கனவுகளை சொன்னீர்கள். ஆனால் நீங்கள் ஒருவருமே கீதா மாதிரி யோசிக்கவி;லை.. எனவே கீதா சொன்ன இலட்சியத்தோடு நாம் எல்லோரு; வாழ்ந்தோமானால் எதிர்கால் சமுதாயத்தை நல்ல சமுதாயமாக உருவாக்க முடியும்..
இந்ந நம்பிக்கையை ஏற்படுத்தி உங்களோடு சேர்த்து என்னையும் சிந்திக்க வைத்த கீதாவுக்கு தமிழ் அகராதியை பரிசாகக் கொடுக்கிறேன் என்று கூறி ஆசிரியர் கீதாவுக்கு தமிழ் அகராதியை பரிசாகக் கொடுத்தார்... ஆகவே மனிதானாக பிறந்த நாம் ஒழுக்கமும்,சிறந்த பண்பும் கொண்டவர் வாழ்வில் மேன்மையடைவர். என்பது தெளிவாகின்றது..
நீதி : ஒழுக்கம் என்றும் உயர்வும் மேன்மையும் தரும்...
0 கருத்துகள்