“ஆசிரியரும் மாணவர்களும் தங்களின் ஒருமைப்பாட்டுடன் தங்களுடைய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக, ஈடுபடுத்துவதற்கு ஏற்ற இடமாக ஒருவருக்கொருவர் ஆதரவாக செயற்படும், கவி நிலை உள்ளதாக வகுப்பறையை மாற்றும் முயற்சியே வகுப்பறை முகாமைத்துவம் எனப்படும். சிறந்த வகுப்பாறை முகாமைத்துவத்தினைப் பேணுவதற்கு மாணவர்களினது ஒழுக்கம் இன்றியமையாததாகும்.
தொழில்முறை பயிற்சி மற்றும் தொழில் அனுபவம் மூலம் வகுப்பறையில் ஒழுக்கத்தை எவ்வாறு பராமரிப்பது என்பது ஆசிரியருக்குத் நன்றாகத் தெரியும். ஒரு நல்ல ஆசிரியர் பெரும்பாலும் தனது வகுப்பின் வேலையை பூரணமாக மேற்கொள்வதற்கும் சேவை புரிவதற்கும் மாணவர் ஒழுக்கம் அத்தியவசியமாகின்றது.
இன்று கல்வியானது விற்பனைப் பொருளாக மாறிவரும் நிலையில் சமயம், ஆன்மீகம் முதலானவை பற்றி அறியாமல் பலர் தீய செயல்களில் உடல், உணர்வு, அன்பு, ஆத்மீகம் போன்றவற்றில் வளர்ச்சிகள் இடம் பெற வேண்டும். இவை முழுவதிலும் விழுமியம் தொடர்புபடுவதால் ஒழுக்கம்சார் விழுமியப் பண்புகளை மாணவர்களிடத்தே கற்பிக்க வேண்டிய தேவைப்பாடுள்ளது. இன்றைய குழந்தைகளே நாளைய தலைவர்களாக இருப்பதனால் அவர்களின் நடத்தை சீரும் சிறப்புமாக இருந்தால்தான் எதிர்காலத்தில் நன்னடத்தை உள்ளவர்களாகவும் ஒளிமயமான உலகத்தை நோக்கி முன்னேறுபவர்களாகவும் வளர்ச்சியடைவர்.
“ஒழுகு” என்ற சொல்லிலிருந்து ஒழுக்கம் பிறந்ததாகும். ‘ஒழுகு’ என்றால் ஒன்றை இடைவிடாது கடைபிடித்தலாகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் வாழ்க்கைக்குத் தேவையான நல்ல - சிறந்த - உயர்ந்த நெறிகளை எந்த நேரத்திலும் விட்டு விடாமல் கடைப்பிடிப்பதாகும்.
வருங்கால தூண்களாக வரவேண்டியவர்கள் இன்றைய பிள்ளைகள். அவர்களை நன்னெறிப்படுத்துவதற்கு ஆசிரியர்கள் மட்டும், அரசாங்கம் மட்டும் உதவினால் போதாது. குழந்தைகளின் ஒழுக்கத்திற்கான முதல் இடம், அவர்களுடைய குடும்பங்கள் தான். குடும்பம் என்பது எல்லா உறவுகளும் சேர்ந்த ஒன்று. நல்லதோர் உலகத்தின் வித்து, நல்லமனம் என்பதால், உலகத்திற்கான வளர்ச்சி, ஒழுக்கம் குடும்பத்திலிருந்தே துவங்குகிறது. நல்ல ஒழுக்கம் என்பது முழு உலகிற்கும் பொதுவானது.
ஒழுக்கத்தின் அங்கமாக அன்பு, அருள், இரக்கம், கருணை, பண்பு, பாசம், பொறை, தியாகம், தொண்டு முதலியன உள்ளன. இவற்றைப் பின்பற்றி வாழ்கின்றவர்கள் சிறந்த ஒழுக்க சீலர்களாக உலகில் வலம் வருவர். ஒழுக்கமானது சிந்தனையில் உயர்வைக் கொடுக்கும், உறவை வளர்க்கும், அன்பைப் பெருக்கும், அமைதியைக் கொடுக்கும். ஒழுக்கம் நம்மை சாதனை புரியத் தூண்டும், மனப்பான்மையை வளர்க்கும். தங்களை உலகிற்கு அடையாளம் காட்டும். ஆகையினால் மாணவரிடத்தில் ஒழுக்கத்தினை பேணுவதனால் வகுப்பறை கற்பித்தல் மேம்படுவதற்கு வழிவகுக்கின்றது.
ஒருவருடைய வாழ்க்கை நடைமுறைகள் ஒழுக்கம் என்று தீர்மானிக்கப்படும். ஒருவர் தனக்கும் தன்னைச் சுற்றி வாழும் மற்றவர்களுக்கும் தீமைகள் வராமல் வாழ்வது ஒழுக்கமுடைய வாழ்வாகும். இப்பிறப்பு மிகப்பெரிய சிறப்பான ஒன்று. இதற்கு இணையானது எதுவும் இல்லை. இதுவும் ஒரே ஒரு தடவைதான். அதுபோல ஒழுக்கமும் இதற்கு நிகரான ஒன்று. ஒருமுறை ஒழுக்கம் தவறினால் நாம் பிறந்த பிறப்பிற்கு பயன் எதுவுமில்லை. இந்தப் பிறப்பை ஒழுக்கமான முறையில் வாழ்ந்து, வாழ்க்கையின் பயனை அடைய வேண்டும். மாணவர்களுக்கு வகுப்பறையில் ஒழுக்க சீர்மியத்தை எடுத்துரைப்பதன் மூலம் முரண்பாடற்ற நேரிய சிந்தனை கொண்ட மாணவர்களை தோற்றிவிக்க முடிகின்றது. இதனால் அனைத்து மாணவர்களும் வகுப்பறையில் ஒற்றுமையாக இயங்குதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகின்றது.
ஒழுக்க நிலையில் தற்சார்பான ஒழுக்கம் முதன்மையானது, அதாவது ஒரு மனிதன் தன்னைத்தான் கொண்டு வாழ்தால். தன்னுடைய ஐம்புலன்களையும் மனதில் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ளல். உலகின் எல்லாதவித நோய், தீமை, துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் ஒழுக்கமில்லாத இழிவுத் தன்மையே. ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் என்றும் நலமுடன், வெற்றிகளுடன், பலருக்குப் பயன்படும்படி வாழ்வர்.
ஒழுக்கம் மிக்கோரை பணிந்து வணங்குவதில் தவறில்லை. ஒழுக்கத்திற்கு உயிரை விடுபவர்கள் சான்றோர் பெருமக்கள். ஒழுக்க சீலர்களை உலகம் போற்றி மகிழும். ஒழுக்கமே உயிரின் அமுதம். மனித வாழ்வை செம்மையானதாகவும் அர்த்தமுள்ள வகையிலும் வாழ்வதற்கு மனித விழுமியங்கள் அறக்கருத்துக்கள் என்பன துணை செய்கின்றன. மனித வாழ்வினை வளமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் செம்மையான வகையில் வாழ்வதற்கும் விழுமியங்களும், அறக்கருத்துக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. விழுமியம் என்பது தனிமனித வாழ்விலும்,சமூக வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாகும். வகுப்பறை ஒழுக்க முகாமைத்துவமானது வகுப்பறையில் தீமையற்ற சுத்தமான சுகாதாரமான மாணவ சமூகத்தை தோற்றுவிக்க அடிப்படையாகின்றது.
மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை விழுமிய பண்புகள் நம் வாழ்வில் பயணிக்கின்றது. குறிப்பாக மனித விழுமியங்களான அன்பு, பரிவு, இரக்கம், நேர்மை, ஒழுக்கம், உதவிசெய்தல், அகிம்சை என பல உள்ளன. “கல்வியில் கிடைக்கப்பெறும் நன்மை யாதெனில் நல்ல மனிதனை உருவாக்குவது மட்டுமல்லாமல் அவர்களை நல்ல முறையில் செயலாற்றவும் செய்கிறது” என்ற கிரேக்க மெய்யியலாளர் பிளேட்டோவின் கருத்திற்கு இணங்க விழுமியப் பண்புகளை வளர்ப்பதிலும், விழுமிய கல்வியை கோட்பாட்டு ரீதியிலும் செயற்பாட்டு ரீதியிலும் வழங்குவதிலும் பாடசாலையின் வகிபங்கு மிக முக்கியமானதாக காணப்படுகின்றது. வகுப்பறையில் அன்பு, பரிவு, இரக்கம், நேர்மை, ஒழுக்கம், உதவிசெய்தல், அகிம்சை கொண்ட மாணவர்களை உருவாக்குவதற்கும் வகுப்பறை முகாமைத்துவத்திற்கும் அவசியமாகின்றது.
இன்றைய மாணவர்களே நாளைய சமூகத்தை ஆள்பவர்களாக வளரப்போகின்றனர். ஒரு பிள்ளை பிறந்து வளர்ந்து முதலில் சந்திக்கின்ற சமூகம் பாடசாலை சமூகமேயாகும். அது மட்டுமன்றி தமது வாழ்க்கைக்குரிய பண்புகளையும் எதிர்காலத்திற்கான கல்வியையும் முறையாக கற்றுக் கொள்கின்ற தளமும் பாடசாலையே ஆகும். ஒரு பிள்ளை பாடசாலை சென்றதும் அவனுக்கு அனைத்தும் ஆசிரியர்களாகி விடுகின்றனர். இவ் ஆசிரியர் மாணவருக்கு வெறுமனே ஏட்டுக்கல்வியை அல்லது புத்தக கல்வியை மட்டும் வழங்க முடியாது வழங்கவும் கூடாது. சீர்மியமான ஓழுக்க கல்வியையும் உரித்தாக்க வேண்டியது முக்கியமானதாகும். இவை யாவும் எதிரடகாலதட தலைவர்களை தோற்றுவிக்கும் வகுப்பறையாக தோற்றம் பெற வழிவகுக்கின்றது
தற்காலத்தில் தொழிநுட்பம் ஆட்கொண்டுள்ள உலகில் மாணவர்களை விழுமியத்தில் வளரச் செய்வது என்பது மிகவும் கடினமான செயலே ஆகும். ஆனால் இப்பணியை முழுமையாக பேணிக்காத்து முழுமையாகவும் கட்டுப்பாடுடனும் வழங்கக்கூடிய அதிகாரமளிக்கப்பட்ட ஒரே இடம் வகுப்பறையாகும் ஆகும். வகுப்பறையில் கற்கும் நல்ல பழக்கங்களினாலேயே மாணவர்கள் சமூகத்திற்கு சென்ற பிறகு செயற்படுத்தப்போகின்றனர். வகுப்பறையில் விழுமியப்பண்பு கொண்ட மாணவர்களை தோற்றுவிப்பதற்கு வுகுப்பறையில் ஒழுக்க முகாமைத்துவம் அவசியமாகின்றது.
அதுமட்டுமன்றி தத்தமது சமய ஒழுகலாறுகள் மற்றும் சமய கருத்துக்களை,அற விழுமியங்களை பிள்ளைகளின் வாழ்க்கை செம்மையாக்கும் வகையில் வழங்க வேண்டும்.மேலும் பாடசாலைகளில் விழுமிய பண்புகளை பேணி ஒழுகும் பிள்ளைகளை பாராட்டும் விதமான ஊக்குவிப்புக்களை வழங்க வேண்டும். அதே போல் நெறி பிறழ்வான நடத்தைகளை கண்டித்தும் அதன் ஆபத்தினை உணர்த்தி நற்பண்புகளை அவர்களிடம் விதைக்க வேண்டும். ஒருவன் நல்ல விழுமிய பண்புகளை கொண்டிரா விட்டால் அவன் எவ்வளவு கற்றாலும் அவன் கற்ற கல்வி பூச்சியமே.
வாழ்வில் அவர் நல்ல விழுமியப்பண்புகளை பின்பற்றி வாழ்வாரேயானால் உலகம் அவரை போற்றும் அதை உதாரணமாக்கி தம் வாழ்வை வாழ்ந்த பெரி;யாளர்களாகிய அப்துல்கலாம், அன்னைதெரேசா, ஜவகர்லால் நேரு போன்றோர் பற்றிய அறிவையும் விளிப்புணர்வுகளையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் கல்வியின் மகத்துவத்தையும் மனித வாழ்வின் உன்னத தன்மையையும் விளக்கி கற்றுக்கொடுக்க வேண்டும்.
உதாரணமாக :- “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது மற்றும் ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்”. அது மட்டுமன்றி உலகில் விழுமியப் பண்புகளை வழங்குவதில் சமய புனிதநூல்கள் மிக முக்கியமாவை என்றே கூற வேண்டும். இவை மனித ஒழுக்க விழுமியங்களுக்கு தனி சிறப்புரிமையே கொடுத்துள்ளன. கிறிஸ்தவர்களது திருவிவிலியம், இந்துக்களின் வேத ஆகமங்கள், இஸ்லாமியர்களின் திருக்குறான், பௌத்தர்களின் திரிப்பிடம் என அனைத்து புனித நூல்களுமே நாம் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டிய விழுமியப் பண்புகளை மிக அழகாக கூறியுள்ளன. இவற்றை எம் மாணவர்கள் பாடசாலையில் ஒரு பாடவிதானமாக கற்கின்றனர்.
பாடசாலையில் சமத்துவம், சகோதரத்துவம் என எல்லோரும் சமமானவர்கள் என வலியுறுத்தும் விதத்திலாக சீருடை அணிந்து செல்கின்றனர். ஒவ்வொரு வெள்ளிகிழமைகளிலும் காலை கூட்டத்துடனான சமய ஆராதனைகள் விசேடமாக நடைபெறுகின்றன. பெரியோரை மதித்தல் மற்றும் உதவி செய்தல், அன்பாக பழகுதல், இயற்கையை பேணுதல், ஏழைகளுக்கு உதவுதல் ஒழுக்கமாக வாழுதல் என விழுமிய கருத்துக்களை கூறும் பாடத்திட்டங்கள் உள்ளடக்கியதாக பாடப்புத்தகங்கள் கல்வி அமைச்சினால் இலவசமாக அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன.
உதாரணமாக:- ஆத்திச்சூடி, நன்நூல், குறுந்தொகை, திருக்குறள் போன்ற அறக் கருத்துக்களை கூறும் இலக்கியங்கள் தமிழ் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. நல்ல விழுமியம் கூறும் சமய பாடநூல்களும் வழங்கப்படுகின்றன.
எமது நாட்டை பொறுத்தவரையில் சமயக்கல்வி மாத்திரமே கலைதிட்டத்தில் புகுத்தப்பட்டுள்ளது. விழுமிய கல்வியோ, பாலியல் ரீதியான கல்வியோ கற்பிக்கப்படுவது இல்லை. ஆனால் இந்தியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சமய கல்வி இல்லை. மாறாக விழுமிய கல்வி மட்டுமே உண்டு. இது எங்கள் மதம் சிறந்தது உங்கள் மதம் சிறந்தது அல்ல என்ற வேறுப்பாட்டை விதைத்து விடும். ஆனால் விழுமிய கல்வி மட்டுமே சிறந்த சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நற்பண்புகளை போதிக்கின்றது.
மாணவர்களிடையே விழுமியத்தை, விழுமிய பண்புகளை ஏற்படுத்தும் ஆசிரியர்கள் வெறுமனே கற்றுக் கொடுப்பதில் மாத்திரம் நின்று விடாமல் விழுமிய பண்புகளை தம்வாழ்வில் செயலில் முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும். ஆசிரியர்கள் மனவெழுச்சி, சமூக அக்கறை தேசிய நலன்கள் மற்றும் நவீன மயமாதலுக்கு ஏற்ற வகையில் உலகத்தோடு ஒத்து வாழ்பவர்களாக நிகழ வேண்டும்.
மேலே குறிப்பிட்ட விடயங்களை அவதானிக்கும் போது மாணவனிடம் ஏற்படுத்தப்படும் ஒழுக்க கல்வியானது எதிர்காலத்தை தயக்கமின்றி வெற்றி கொள்ளும் மனிதனை படைக்கும் கல்வியையே சுட்டி நிற்கின்றது. அந்தவகையில் வகுப்பறையில் ஒழுக்கத்தை பேணுவதன் மூலம் மாணவர்கள் மனதில் மனித பண்பினை விளைவிக்க முடிகின்றது. அதனால் வகுப்பறையில் நேரிய மாணவர்களை படைத்து வளமான சமூகத்தை படைப்பதனை காணமுடிகின்றது.
இன்றைய கால கட்டத்தை எடுத்துக் கொண்டால் அனைத்து பெற்றோரும் தமது பிள்ளைகள் வைத்தியர், பொறியியலாளர் என உயர் பதவிகளை வகிக்க வேண்டும் என நினைக்கிறார்களே தவிர தம் பிள்ளை சிறந்த ஒழுக்கமுள்ள பிள்ளையாக வளர்கிறானா என அவதானிப்பது குறைந்து கொண்டு செல்கின்றது. அந்த நிலை மாற்றமடைந்து பாடசாலைகள் வெறுமனே பரீட்சைகளுக்கு மாத்திரம் மாணவர்களை தயார்படுத்தும் நிறுவனமாக அல்லாமல் சிறந்த மனிதனை உருவாக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
இப்பணியை ஆசிரியர்களும், அதிபர்களும், பாடசாலை, சமூகம் மற்றும் பெற்றோரும் பொறுப்பாக அன்றி தமது கடமையாக மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் எமது நாட்டில் வன்முறையற்ற, போதைப்பொருள் பாவனையற்ற துஷ்பிரயோகங்களற்ற ஒற்றுமையும் நல்லிணக்கமும் மிக்க சமூகத்தை விருட்சமாக உருவாக்க விழுமிய கல்வியை பாடசாலைகளில் வித்தாக இட்டு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முயற்சி எடுப்போம்.
0 கருத்துகள்