மாணவர் மத்தியில் தலைமைத்துவத்தினை வளர்த்தெடுப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய செயற்திட்டங்கள்
மாணவ தலைவர்களை தெரிவு செய்தல்
மாணவ பாராளுமன்றம் அமைத்தல்
வகுப்பறைத்தலைவர் தெரிவு
சுற்றாடல்,சுகாதாரம்,அனர்த்த முகாமைத்துவம் போன்ற குழுக்களை அமைத்தல்
விழாக்களை நடத்துதல்.
கல்விச் சுற்றுலா செல்லுதல்..
போன்ற பல்வேறு செயற்திடடங்களின் மூலம் மாணவர்களின் மத்தியில் தலைமைத்துவப் பண்பிணை பாடசாலையில் வளர்க்கப்படுகின்றது. அவற்றில் சிலவற்றை சுருக்கமாக நோக்குவோம்.
மாணவர்கள் மத்தியில் வகுப்பறை தலைவர், மாணவ தலைவர் என்னும் தலைமைத்துவ பதவிகள் பாடசாலைகளில் ஒப்படைக்கப்படுகின்றது. அவ்வாறு வழங்கும் போது எதிர்காலத்தில் தொழில் புரியுமிடம், அரசியல், சமூக குழுக்கள், சமூக நிறுவனங்கள், குடும்பத்தின் தலைவன் போன்ற பல இடங்களில் சிறந்த தலைவனாக எடுக்க வேண்டியிருக்கின்றது.
இவ்வாறு பாடசாலையில் விருத்தி செய்யப்பட்ட தலைமைத்துவ பண்புகள் யாவும் மாணவர்களின் எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துவமும் ஆளுமையும் கொண்ட மனிதர்களாக விளங்குவார்கள். இவை தவிரவும் வகுப்பறைச் செயற்பாடுகள் தவிர்ந்த சந்தர்ப்பங்களிலும் மாணவர்களின் தலைமைத்துவம் விருத்தி செய்யப்படுகின்றது.
விளையாட்டுக்களின் போது ஒவ்வொரு மாணவரும் தமது தலைமைத்துவ பண்பிணை சிறப்பாக வளர்த்தெடுக்க முடியும். விளையாட்டு எப்போதும் ஒரு மனிதனின் உடலினையும் உள்ளத்தினையும் திடமாக வைத்துக்கொள்வதற்கு உதவுகின்றது. சிறந்த உடலினையும் உள்ளத்தினையும் சுறுசுறுப்பாகமும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் சிறந்த தலைமைத்துவத்தினை கொண்டிருக்க முடியும்.
பாடசாலையில் விளையாட்டுக்களில் ஈடுபடும் போது மாணவர்கள் ஆரோக்கியமா உடலினையும் உள்ளத்தினையும் பெற்றுக் கொள்வதனால் தலைமைத்துவ பண்பிணை வளர்த்துக் கொள்ள முடிகின்றது.
மாணவர்கள் பாடசாலையில் சகல விடயங்களிலும் பங்கேற்கும் போது பல்வேறுபட்ட அனுபவங்களை பெற்றுக் கொள்ளுகின்றனர். அவ்வாறு பெற்றுக் கொள்ளும் போது சமூகத்தல் தமக்கு பொறுத்தமானவற்றை பெற்றுக் கொண்டு சமூகமயாகிக் கொள்ளுகின்றனர்.
தாம் வாழும் சமூகத்தின் நியதிக்கேற்ப தமது உரிமைகளையும் கடமைகளையும் அறிந்து கொள்ளுகின்றனர். இதற்காக பாடசாலையில் நிகழ்கின்ற கல்வி, சமய, சமூகம் சார்ந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் போது அவர்களிடம் சமூகமயமாதல் தோன்றுகின்றது. இதன் காரணமாக பிள்ளைகளை பொறுத்தமான நிகழ்வுகளில் கலந்து கொள்ளச் செய்தல் அவசியமாகின்றது.
இளந்தலைமுறையினரை எதிர்கால குடும்பத்தின், சமூகத்தின், தேசத்தின் தலைவர்களாகப் பரிணமிக்கக்கூடிய மாணவர்களாக உருவாக்குவது பாடசாலையின் கடமையாகும். மாணவர்களிடம் இயற்கையாக மறைந்து காணப்படும் தலைமைத்துவப் பண்புகளை சரியாக இனங்கண்டு வெளிக்கொண்டுவர வேண்டும்.
அவ்வாறு மாணவர்களின் தலைமைத்துவத்தினை வளர்த்துக் கொள்வதில் ஒரு செயற்பாடாக மாணவ பாரளுமன்றம் என்பது மிகவும் பிரதானமொன்றாக காணப்படுகின்றது. மாணவ பாரளுமன்றத்தின் மூலம் மாணவர்கள் தமது பிரச்சினைகளையே வெளிக்கொணருகின்றனர். தாமாக முன்வந்து துணிகரமாக தமது பிரச்சினைகளை முன்வைக்கும் போது ஏனைய மாணவர்களின் முன்னிலையில் தலைமைத்துவம் கொண்டவர்களாக திகழ்கின்றனர். இத்தகைய செயற்பாடானது சமூகத்தில் காணப்படுகின்ற சங்கங்களில் தலைமை தாங்கி வழி நடத்துவதற்கும் வழி சமைக்கின்றது.
ஒவ்வொரு மாணவர்களும் ஏதோவொரு திறமையைக் கொண்டவர்களாகவே காணப்படுவர். அத்திறமைகளை முழுமையாக வெளிக்கொணர்வதற்கு பாடசாலைச் சூழலில் களம் அமைத்துக் கொடுக்கப்படல் வேண்டும்.
மாணவர்கள் பாடசாலைச் செயற்பாடுகளில் பங்கு பெறுவதுடன் சில செயற்றிட்டங்களைத் தாமே திட்டமிட்டு செயற்படுத்தி மதிப்பீடு செய்யும் போது அவர்களிடம் தலைமைத்துவ திறன் சுயமாகவே வளரும். பாடசாலையில் சுற்றாடல், சுகாதாரம், அனர்த்த முகாமைத்துவம் போன்ற குழுக்களை அமைத்து மாணவர்களை செயற்படுத்தும் போது தாமாக முன்வந்து செய்றபடுகின்ற தலைமைத்துவத்தின காணமுடிகின்றது. இப் பண்பானது சமுதாயத்தில் அம் மாணவனை முன்னுதாரணமான மனிதனாக எடுத்துக் காட்டுகின்றது.
ஆற்றும் கருமங்களில் ஒழுங்கினைப் பேணுதல், நேரமுகாமைத்துவத்தைப் பேணுதல் முதலியனவும் மிக முக்கியமான தலைமைப் பண்புகளாகும். இவ்வகையான பண்புகளை மாணவர் மத்தியில் தோற்றுவிப்பதற்கா ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களுக்கு முன்மாதிரியாக காணப்பட்டால மாத்திரமே முடிகின்றது.
மாணவர்கள் பலர் தமது ஆசிரியர்களையே முன்மாதிரியாக கொள்கின்றனர். குறிப்பாக ஆரம்பகல்வி மாணவர்களிடம் இதனை அவதானிக்க முடியும். இளமையில் மாணவர்களிடம் குடிகொள்வதனால் வளர்ந்தவர்களான பின்னரும் அப்படியே நிலைத்து காணப்படும்.
இளந்தலைமுறையினரை எதிர்கால குடும்பத்தின், சமூகத்தின், தேசத்தின் தலைவர்களாகப் பரிணமிக்கக்கூடிய மாணவர்களாக உருவாக்குவது பாடசாலையின் கடமையாகும். மாணவர்களிடம் இயற்கையாக மறைந்து காணப்படும் தலைமைத்துவப் பண்புகளை சரியாக இனங்கண்டு வெளிக்கொண்டுவர வேண்டும். சிறந்த தலைவர்களைக் கொண்டிராத சமூகமும், நாடும் ஒருபோதும் முன்னேறியதில்லை.
அந்த வகையில் தலைமைத்துவம் எனப்படுவது மனிதன் பொது இலக்கை முன்வைத்து குழுவாகச் செயற்படுகின்ற போது தனிநபர் ஒருவர் மற்றைய உறுப்பினர்கள் தாம் விரும்பி ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர்கள் மீது செலுத்தப்படுகின்ற தாக்கம் அல்லது செல்வாக்கு எனலாம். எனவேதான் தலைமைத்துவம் என்பது மற்றவர்களை சரியான பாதையை நோக்கிச்செல்ல வழிநடத்துவதாகும்.
0 கருத்துகள்