அதிபரின் வினைத்திறனான தலைமைத்துவம் ஒரு பாடசாலை திறம்பட இயங்குவதில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தலைமைத்துவம் என்பது ஒரு நிறுவனத்தையும் அதன்; உறுப்பினர்களையும் நிர்வகிப்பதாகும்.
அந்நிறுவனங்களுக்குத் தேவையான பொருத்தமான நபர்களையும் பௌதிக உள்ளகக் கட்டமைப்பையும் பேணுவதன் மூலம் ஒழுங்கான மேற்பார்வை கண்காணிப்பு என்பனவற்றுடன் உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாத்து பாடசாலையின் உச்ச வெளியீட்டை அதிகரிப்பது அதிபரின் தலைமைத்துவம் ஆகும் சிறந்த தலைமைத்துவம் என்பது ஒரு நோக்கை அடைய “ஒரு சொல் அல்லது செயலினால் மற்றவர்களை அந்நோக்கை அடையச்செய்ய எடுக்கும் ஆற்றல்” ஆகும்.
வரையறுக்கப்பட்ட வளங்களை (மனித, பௌதீக) கொண்டு பாடசாலை எவ்வாறு தனது குறிக்கோளை அடைந்து கொள்ளுகின்றதோ அதுவே அதிபரின் தலைமைத்துவம் ஆகும். தiமைத்துவம் என்பது ஒரு தலைவர் மேற்கொள்ளும் நடைமுறை உத்திகளை மட்டுமன்றி பலரது கூட்டுச் செயல்களையும் குறித்து நிற்பதாகும்.
நிர்வாகத்தில் முறையான அதிகாரங்களும், பொறுப்புக்களும் அதன் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டாலும் அவை நிர்வாக நலன் கருதி பல மட்டங்களில் பலருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுவதனால், அவற்றைப் பெறும் ஒவ்வொரு அதிகாரியும் தமக்கு கீழ் உள்ளவர்களைக் கட்டுப்படுத்திக் கடமைகளைப் புரியவைக்கின்றனர். எனவே மற்றவர்களின் உழைப்பின் மூலம் குறிக்கோள்களையும், செயற்பாடுகளையும் முழுமையாக முற்றுப் பெற வைக்கும் சிறப்புச் செயலே தலைமைத்துவமாகும்.
தலைவர் என்ற வகையில் பாடசாலை அதிபரிடம் காணப்பட வேண்டிய முக்கிய பண்புகள் மாணவர்களாயினும் சரி ஏனையவர்களாயினும் சரி ஒருவர் சிறந்த தலைவராக மாறுவதற்கு அதற்கே உரிய பண்புகளை அவர் தன்னகத்தே கொண்டிருப்பது அவசியமாகும்.
உண்மைத் தன்மை நம்பகத்தன்மை
தூரநோக்கான சிந்தனை
தொடர்பாடற் திறன்
ஏனையவர்களுடன் சுமுகமான உறவு
நெகிழ்வூத் தன்மை
குழுவாகச் சேர்ந்து வேலை செய்யும் பண்பு
தீர்மானிக்கும் ஆற்றல்
திட்டமிடல்
கலந்துரையாடல்
கற்பித்தலில் ஈடுபடுகின்ற ஆசிரியர்கள் தனியார் வேறுபாட்டின் காரணமாக வித்தியாசமான மனப்பாங்குகளைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புக்கள் கிடைக்காமல் போகும்போது அதிபருடன் முரண்படும் நிலையில் காணப்படுவர். இது சகல பாடசாலைகளிலும் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சினையாகும்.
இது வகுப்பறைச் செயற்பாட்டிலும் முகாமைத்துவத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதினால் ஆசிரியர்களின் தேவைகள், எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் அதிபர் முன்னிற்க வேண்டும். மாணவர்களின் அடைவுமட்ட முன்னேற்றமானது பாடசாலையின் அபிவிருத்தியிலும், பாடசாலையின் அபிவிருத்தியானது ஆசிரியரின் தேவைகள், எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும் பட்சத்திலுமே தங்கியுள்ளது.
எனவே ஆசிரியர்களின் எதிர்பார்ப்பினை தீர்த்து வைப்பதும், வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதும் அதிபரின் ஆற்றலிலும், அறிவிலும், மனப்பாங்கிலுமே தங்கியுள்ளது. இவ்வாறாக கற்பித்தலின் போது ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வல்லமை அதிபரிடம் காணப்படுகின்றது.
பாடசாலையின் அதிபர் அறிவுறுத்தும் தலைமைத்துவமுடையவர் என்ற வகையில் பல வகிபங்குகளை ஏற்கவேண்டியவராக இருக்கின்றார். ஆசிரியர்களின் எதிர்பார்ப்புக்கள், தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பவர் என்னும் வகிபங்கு மிகவும் முக்கியமானதொன்றாகும்.
இந்த வகிபங்கினை அவர் எவ்வளவு திறமையுடன் மேற்கொள்கின்றாரோ அவ்வளவிற்கு வகுப்பறைச் செயற்பாட்டையும் முன்னேற்றி ஆசிரியர்களின் திருப்தியையும் நிறைவேற்றி இறுதியில் “ஏற்பாட்டாளன்” என்ற பங்கில் அதிபர் வெற்றி காண தலைமைத்துவம் பங்களிக்கின்றது.
பொதுவாக இன்று பாடசாலை மட்டங்களை பொருத்தளவில் அங்கு இடம்பெறுகின்ற அபிவிருத்தி மற்றும் கற்றல் கற்பித்தல் என்பன அதிபரினுடைய பொறுப்பின் படியே இடம்பெறுகின்றது. அந்த வகையில் பாடசாலைக்கு கொண்டு வருகின்ற புதிய மாற்றங்கள், திட்டங்கள் என்பன இடைநடுவே தடைப்படுவதற்கு பல்வேறு விடயங்கள் காரணமாகின்றன.
அதாவது அதிபர் மீது எதிர்ப்பினை கொண்டவர்கள் இடையூூறுகளை விளைவிக்கலாம். குறிப்பிட்ட அந்த பாடசாலiயை சூழ்ந்துள்ள சமூகங்களின் அழுத்தங்கள் முக்கியமான விடயங்களாக உள்ளன. இவ்வாறான அழுத்தங்கள் தோன்றுகின்ற போது துணிகரமாக முடிவெடுத்து முன்னோக்கி இலக்கினை அடைந்து கொள்ளும் வல்லமை அதிபர் கொண்டுள்ளார்.
பாடசாலையினுடைய அனைத்துக் கருமங்களையும் சிறப்பான முறையில் ஒழுங்கமைப்பதில் முக்கிய இடம் வகிப்பது அதிபரும் ஆசிரியர்களும் ஆவர். இவர்களின் பணிகள் தனித்தனியான முறையிலும், குழுச்செயற்பாட்டின் அடிப்படையிலும் மிகவும் முக்கியமானதாக இருப்பதோடு சிறந்த நிருவாகத்திற்கு அவர்களிடையே நிலவும் தொடர்பும் மிக முக்கியமானதாகும்.
பாடசாலையின் அதிபரும், ஆசிரிய குழுவினரும் அந்த நிறுவனத்தை இயக்கும் முகாமைத்துவக் குழுவின் உறுப்பினர்களாவர். ஆகவே இவர்களிடையே இருக்க வேண்டிய தொடர்பு இணக்கமானதாகவும், நெகிழ்வானதாகவும் அமையும்படி அதிபர் அமைத்துக் கொள்கின்றார்.
பாடசாலையில் ஏற்படும் பௌதீக, ஆளணி வள நிலைமையினை வினைத்திறன்மிக்கதாக்க முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகளில் எதிர்நோக்கும் சவால்கள்களை தவிர்த்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் பல்வேறு உபாயங்களையும், நுட்பங்களையும் கையாண்டு தீர்வொன்றினை பெற்றுக் கொடுத்து ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பார்.
ஓர் ஆசிரியர் தவறாக செல்லும் விடயங்களில் ஒழுங்காக அவதானித்து அவற்றுடன் தொடர்புபட்டுள்ள காரணிகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும். அதாவது வகுப்பறையில் என்ன நடைபெறுகின்றது என்பதை உன்னிப்பாக கவனித்து பகுப்பாய்வு செய்ய வேண்டும். காரணிகளைப் பகுப்பாய்வு செய்யாமல் பரிகார நடவடிக்கைகளை மேற்கொண்டு வகுப்பறை ஒழுங்குகளை முகாமைத்துவம் செய்தல்.
சிறந்த ஆளிடைத் திறன்களான பிறரது உணர்வுகளை மதித்தல், பிறருடன் நல்லுறவைப் பேணுதல், மெளிவாக உறையாடுதல், சிறந்த மனப்பாங்குகளை வெளிப்படுத்துதல் போன்ற ஆளிடைத்திறன்களைக் கொண்டு தனது பணிகளை பூரணமாக பூர்த்தி செய்து கொள்ளுதல் பாடசாலையின் அடைவுமட்டத்தை உயர்த்திக் கொள்வதற்கு இயலுமானதாகின்றது.
மாறிவருகின்ற தொழிநுட்ப வளர்ச்சிக்கேற்ப தனது தொழிநுட்ப திறன்களை வளர்த்துக் கொண்டு நவீன உலகிற்கேற்ப சமூகம் எதிர்பார்க்கும் பாடசாலையின் இலக்குகளை அடைவதற்கும் பாடசாலையின் ஆற்றலை விருத்தியாக்குவதற்கும் பாடசாலை வினைத்திறனையும் மே;படுத்துதல்.
குழுவாக இணைந்து தூரநோக்குடன் சிந்தித்து நீண்டகால நன்மையை அடிப்படையாகக் கொண்டு செயற்படுதல் மற்றும் தமது பொறுப்பில் இருந்து விலகாமல் ஏனையோருக்கு பொறுப்புக் கூறுதல், அர்ப்பணிப்புடன் செயற்படுதல் என்பவற்றின் மூலம் பாடசாலையின் அடைவுமட்டத்தை உயர்த்திக் கொண்டு சமூகத்தில் உயர்ந்து விளங்குவதற்கு வழிசெய்தல்.
ஒவ்வொரு பாடசாலைக்கும் அதன் விருத்தியில் அக்கறை மிக்க சமூக அங்கத்தவர்கள் காணப்படுவர். அத்தகையோர்களில் பலமான சமூக அங்கத்தவர்களை பாடசாலை அதிபர்கள் இனங்கண்டு பாடசாலை அபிவிருத்திக்காக ஆலோசனைகள்,உதவிகளைப் பெற்றுக்கொள்ள முனைப்புடன் ஈடுபடுவார். இதன் போது பழைய மாணவர் சங்ககங்களைச் சார்ந்தோரும் உயர் கல்விப் பின்னணியையும், அர்ப்பணிப்புணர்வும் கொண்ட அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டு அப்போது பாடசாலை அதிபர்களின் தலமைத்துவ வினையாற்றலுக்கும் பக்கபலமாக இருக்க வழிகோலுகின்றது.
பாடசாலை சூழல் சார்ந்த மாணவர்களுக்குப் பொருத்தமான இணைப் பாடவிதான செயற்பாடுகளை அதிபர்கள் இனங்கண்டு அவற்றின் அடைவை வலயமட்ட, மாகாண மட்ட, தேசியமட்ட ரீதியாக உயர் பெறுபேறுகளைபெறச் செய்தல் வேண்டும்.
இதனால் பாடசாலை ஒன்றை நாடு பூராகவோ அல்லது மாவட்டம் பூராகவோ இனங்காணச் செய்வதுடன் உயர் நிலைக்கு இட்டுச் செல்ல பொருத்தமான இணைப்பாட விதானச் செயற்பாடுகள் உதவும். அதனால் பாடசாலைகள் வெளியிலிருந்து பல உதவிகளைப்பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறானசெயற்பாடுகளைச் செய்வதனூடாக அதிபர் தமது பாடசாலைகளை அபிவிருத்தி நோக்கிக் கொண்டு செல்ல முடிதல்.
ஒரு பாடசாலையினை விளைதிறன் உள்ள பாடசாலையாக அபிவிருத்தி செய்வதில் அதிபரின் பங்கு இன்றியமையாதது. இவ்வாறான அபிவிருத்திக்கு சிறந்த தலைமைத்துவப்பண்பு அவசியமாகின்றது. என்பதாகும். இந்த ஆற்றல் ஒரு பாடசாலை அதிபருக்கு முழுமையாக இருக்குமெனில் அப்பாடசாலையை அபிவிருத்தி செய்வதில் எவ்வித தடைகளும் ஏற்படமாட்டாது.
அதிபரானவர் மேலே குறிப்பட்டது போன்று பல்வகையான தலைமைத்துவ திறன்களை தன்னகத்தே கொண்டுள்ளார் என்பதுடன் இத் தலைமைத்துவ திறன்களை கைக்கொண்டு பாடசாலையினதும், சமூகத்தினதும் நன்மைக்காக அளப்பரிய கடமையாற்றுகின்றார் என்பது தெளிவாகின்றது..
0 கருத்துகள்