ஆசிரியரின் பொறுப்புக்களும்,கடமைகளும்

 ஆசிரியரின் பொறுப்புக்களும்,கடமைகளும்

ஆசிரியர் மாணவரின் மூன்றாவது பெற்றோர் ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு ஒரு நிலையான நேர்மறையான, முன்னுதாரணமான முன்மாதிரியாக எப்போதும் இருக்க வேண்டும். ஆசிரியரானவரான பிள்ளைக்கு அடிப்படை அறிவு, திறன், மனப்பாங்கினை வளர்த்துக் கொள்வதுடன் இன்னும் பல பொறுப்புக்களையும் கடமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளார். அவ்வாறு அனுதினமும் ஆற்றும் பொறுப்புக்களையும் கடமைகளையும் ஒருபோதும் வரையரை செய்து கூற முடியாது. 

ஆசிரியரின் பொறுப்புக்களும்,கடமைகளும்



தினமும் ஆசிரியரால் ஆற்றப்படும் கடமைகளும் பொறுப்புக்களும்

பிள்ளையினது அறிவு,  திறன்,  மனப்பாங்கு,  பலம்  மற்றும் பலவீனங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் மதிப்பிடுதல்.

வகுப்பறை விதிகளை திட்டமிடல்,  நடைமுறைப்படுத்தல்.

மாணவர்களை தயார்படுத்துதல். (பரீட்சை, போட்டிகள்,விளையாட்டு, ஏனையவை)

மாணவர் முன்னேற்றம் தொடர்பாக பெற்றோருக்கு தெரிவித்தல். (கற்றல், பரீட்சை புள்ளிகள், ஒழுக்கம், செயற்பாடுகள்)

மேற்பார்வை செய்தல்.

வகுப்பறைச் செயற்பாடுகளைகளை ஒழுங்கமைத்து மேற்கொள்ளுதல்.

                        போன்ற பல கடமைகளை தினமும் பொறுப்பாக நிறைவேற்றுகின்றார்.

புதிய மாணவன் என்பவன் எந்த பயிரையும் பயிர்செய்யக்கூடிய விளைநிலம் போன்றவன். அதிலே நல்ல பயிர்களை போல நல்ல எண்ணங்களை விதைத்து விளைநிலமாக்க வேண்டிய கடமை ஆசியரின் கடமையாகின்றது. அதற்காக மாணவர்களிடம் ஒழிந்திருக்கும் திறன்கள் மற்றும் அவனது பலம் பலவீனம் என்பவற்றை அறிந்து அவனுக்குரியவற்றை சரியாக வழங்கும் போது சிறந்த அறுவடையை பெற்றுக்கொள்ள முடிகின்றது.

பிள்ளையின் மனம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றினை போன்றது. சரியான பாதையில் அவர்களை திருப்பிவிட்டால் அதற்கும் மற்றவர்களுக்கும் பயன் அதேபோலவே தான் மாணவனின் மன ஓட்டத்தினை  நல்ல பாதையில் ஓடவிட்டு கரையாக ஆசிரியர் இருப்பது பொறுப்பு. 

அவ்வாறு மாணவனை சரியான பாதையில் திருப்புவதற்காக உரியவாறு திட்டமிட்டு செயற்படுத்துவதன் மூலமே மாணவனின் பாதையை முறையாக அமைக்க முடிகின்றது. உதாரணமாக கற்பித்தல் செய்றபாட்டில் ஈடுபடும் போது மாணவனது மனநிலை தொடக்கம் அவனுக்கு பயன்படுத்தும் சகல விடயங்கள் தொடர்பாகவும் முறையாக திட்டமிட்டு செயற்படுத்துவதன் மூலம் சரியான திசையில் மாணவனை அழைத்து செல்வது ஆசிரியரின் பொறுப்பாகும்.

மாணவனை எதிர்காலத்தில் சிறந்த வளமிக்கவனாக தயார்படுத்தும் கடமை ஆசிரியருடையதாகும். தொழிநுட்ப உலகில் பிள்ளைகள் புள்ளியை அடிப்படையாகக் கொண்டு மிகச் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக் கொள்வதனை நோக்காமாகக் கொண்டு கற்கின்றனர் அதற்கு அவர்களை தயார்படுத்துவது ஆசிரியராவார். மாணவன் எதிர்கொள்ளவிருக்கும் பரீட்சைக்கு உரியவாறு மாணவனை தயார்படுத்தி சிறந்த பெறுபேற்றை பெறச் செய்வது ஆசிரியரின் கடமையாகின்றது. 

ஒரு மாணவனின் முன்னேற்றம் தொடர்பாக எப்போதும் பெற்றோரும் அறியும் வகையில் தொடர்பினை பேணுதல் ஆசிரியரின் பொறுப்பாகின்றது. வகுப்பறையில் மாணவன் கற்றலில் கொண்டுள்ள முன்னேற்றம் ஆர்வம் தொடர்பாகவும் பெற்றோருக்கு அறியத்தருவதன் மூலம் எப்போதும் மாணவனின் முன்னேற்றத்தினை நிலையானதாக பேணுவது தலையாய கடமையும் பொறுப்புமாகும்.

வீட்டில் இருந்து புறப்பட்ட மாணவன் வீடு போய்ச் சேரும் வரை ஆசிரியரே அவனது மூன்றாம் நிலை பெற்றோர் ஆவார்கள். பாடசாலைக்குள் காலடி வைத்ததும் மாணவனை முழுமையாக கவனித்து பாதுகாத்துக் கொள்பவர்கள் ஆசிரியர்கள் என்ற வகையில் அவ் வேளையை இலகுபடுத்துவதற்காக சில விதிமுறைளை உருவாக்குகின்றனர். 

இவ் விதி முறைகள் யாவும் வகுப்பறைக்கும் வகுப்பறைக்கு வெளியேயும் அனைவருக்கும் பொருந்தும் வகையிலே உருவாக்கப்படுகின்றது. இதன் மூலம் பாடசாலைக்குள் தன்னிச்சையாக செயற்படுவதனை தடுக்கின்றது. அதனால் மாணவன் சூழல் நேயமிக்க மாணவனாக மாறுகின்றான். இவ்வாறாக ஆசிரியர்கள் கைக்கொள்ளும் விதிமுறைகள் மாணவனை ஓழுக்கமுள்ளவனாகவும், நேர்மையானவனாகவும் சிறந்த மாணவானாக உருவாக்கின்றது. ஆகையினால் சமுகத்தில சிறந்த மாணவனையும், மனிதனையும் உருவாக்குவது ஆசிரியரின் பொறுப்பாகின்றது.

மாணவர்களின் ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் அவதானமாக மேற்பார்வை செய்வதும் கடமையாகின்றது. கற்றல், இணைகலைத்திட்ட செயற்பாடுகள், பழக்கவழக்கம், பண்பாடு, வகுப்பறை, மைதானம் போன்ற பலவிடயங்களில் அவதானித்து மேற்பார்வை செய்து தேவையானவற்றை அவர்களுக்கு போதித்தல் கடமையாகின்றது. 

ஆசிரியரின் பொறுப்புக்களும்,கடமைகளும்

ஒவ்வொரு மாணவனும் வேறுபட்ட மனநிலையை கொண்டிருப்பவர்கள். அவர்கள் அனைவரும் ஒன்று சேரும் போது வெவ்வேறுபட்ட எண்ணத்தினையும் சிந்தனையும் வெளிப்படுத்த முனைவார்கள். அதனால் மாணவர்களிடையே முரண்பட்ட நிலை உருவாகலாம் அதனால் தொடர்ந்து ஒவ்வொரு செய்றபாட்டின் போதும் மேற்பார்பார்வை செய்து நன்மை தீமைகளை எடுத்துக்காட்டி நல்வழிப்படுத்துவது கட்டாயமாகின்றது.

நல்வழியில் கைபிடித்துச் செல்லும் ஆசிரியர் மாணவனை அவனது எதிர்காலத்திலும் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கும் துணைபுரிகிறார். அதற்காக வகுப்பறை செயற்பாடுகளில் மாணவனை ஆர்வத்துடன் ஈடுபடுத்தி கற்றலில் முழுமையடையச் செய்து சிறந்த பெறுபேற்றை பெற்று சமூகத்தில் சிறந்த பிரசையாக வாழ்வதற்கு உதவி புரிகிறார். இதற்காக வகுப்பறையில் ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் அவனது வெற்றி தோல்வியின் போதும் கூடவே இருந்து ஊக்கமளித்து முன்னேறச் செய்வது ஆசிரியரின் கடமையாகின்றது.

ஆசிரியரானவர் மேற்படி பல்வேறு பொறுப்புக்களையும், கடமைகளையும் தன்னகத்தே கொண்டு தனது பணியினை சிறப்பாக புரிகிறார் என்பது தெளிவாகின்றது. இதை ஒவ்வொரு ஆசிரியரும்  உணர்ந்து செயல்பட்டால் ஒவ்வொரு மாணவனும் உயர்ந்தவன் ஆவான் ….

கருத்துரையிடுக

0 கருத்துகள்