ஆசிரியரும் இணைப்பாடவிதான செயற்பாடுகளும்
பாடசாலையில் கலைத்திட்டத்துடன் ஒப்பிட்டவாறு வகுப்பறை போதனைக்கு அப்பால் மாணவர்களின் உடல் வளர்ச்சி,உள வளர்ச்சி,சமூக வளர்ச்சி,பண்பாட்டு வளர்ச்சி ஆகியவற்றை வளர்க்ககூடிய பல்வேறுபட்ட நிகழ்ச்சி திட்டங்களில் மாணவர்களை பங்கு பெறச் செய்வதன் மூலம் மாணவர்களை ஒரு மனிதனாக வளர்க்கும் செற்பாடுகள் யாவும் இணைப்பாடவிதானம் என சொல்லப்படுகிறது.
![]() |
And co-curricular activities |இணைப்பாடவிதான செயற்பாடுகளும் |
மாணவர்களிடமிருந்து இணைப்பாடவிதான
செய்றபாட்டினை புறந்தள்ளி ஒதுக்கி விட்டு சமநிலையான ஆளுமைப் பண்பிணை எம்மால்
ஒருபோதும் அவதானிக்க முடியாது. மாணவன் என்பவன் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை
பெற்று சமூகத்தை உயர்த்தும் ஒரு கருவியல்ல மாறாக எதிர்காலத்தில் வினைத்திறன்
மிக்கதும் விளைதிறன் மிக்கதுமான சுறுசுறுப்பான சமூகத்தை உருவாக்;க சிந்திக்கும் ஒரு உயிரி ஆவான்.
சிந்திக்கும் இயல்பு கொண்ட ஒரு
மனிதனை உருவாக்குவதற்கு ஆசிரியரானவர் கலைத்திட்டத்திற்கு அப்பால் சென்று மாணவனிடம்
ஆளுமையை வளர்த்தெடுக்கும் செயற்பாடுகளே இணைப்பாடவிதானமாகும்;. பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வியை மாணவர்களுக்கு வழங்காமல்
இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களை பங்குபற்றச் செய்வதன் மூலம் சுயநம்பிக்கை,சுயகட்டுப்பாடு,சிந்தைனை செய்யும் திறன்,ஒழுக்கம்,நேர்மை,கல்வி என நற்குணங்களைக்
கொண்ட ஒரு சிறந்த மாணவனை உருவாக்க முடியும்.
மாணவர்களின் அறிவின் விரைவான
வளர்ச்சிக்கும் புதிய நூற்றாண்டின் சவால்களுக்கும் முகங் கொடுத்து தமக்கான
தொழிலுலகுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் கல்வியையும் திறன்களையும்
பெற்றுக்கொள்வதி;ல் இணைகலைத்திட்ட
செயற்பாடுகள் இன்றியமையாததாகும். ஒவ்வொரு தனி மாணவனும் தனது விருப்பு,வெறுப்பு,திறமை,சந்தர்ப்பம் என்பவற்றுக்கமைய இணைப்பாட செயற்பாடுகளில்
இணைந்து சமூகத்திறன்களை பெற்றுக்கொள்வதற்கு வழிப்படுத்துவது ஒவ்வொரு ஆசிரியரினதும்
தலையாய கடமையாகும்.
தற்காலத்தில் சில ஆசிரியர்கள் இதனை தமக்குள் ஒரு சுமையெனக் கருதி செயற்படுவதனையும் காணமுடிகிறது. எத்தனை பேருக்கு தெரியும் இணைப்பாட விதான செயற்பாடானது மகிழ்ச்சிகரமான வகுப்பறை கற்பித்தலுக்கான ஒரு உத்தி என பாடசாலைகளில் போதியளவு வளங்கள் இல்லாமையினால் அதனை ஒரு பிரச்சினையாகக் கொண்டு அதற்கான நேரத்தினையும் ஒதுக்காமல் முழுநேர கற்றலில் ஈடுபடுத்தி மாணவர்களின் கற்றலில் ஆர்வமின்மையை உருவாக்கின்றனர்.
பாடசாலையில்
நடைபெறும் மாணவனுக்கு மிகவும் பிடித்த ஒரு இணை கலைத்திட்ட செயற்பாடு இல்ல
விளையாட்டாகின்றது. இதன் போது மாணவன் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் களம்
என்று சொல்வதில் எந்த விதமான ஐயப்பாடுமில்லை. அதுமட்டுமில்லாமல் ஆசிரிருக்கும் இடையிலான உறவு நெருக்காமாகின்றது
இதன் போது மாணவனின் தேவைகளை இனங்கண்டு கொள்வதற்கு இலகுவாகின்றது. இதனால்
ஆசிரியருக்கு கற்பித்தல் செயற்பாட்டினை வெற்றிகரமாக முன்னெடுத்துக் செல்லவும்
வழிவகுக்கின்றது.
உண்மையில் பாடசாலையில் ஆசிரியருக்கு வழங்கப்படுகின்ற மேலதிக கடமைகளும் பொறுப்புக்களும் இந்நிலைமையை ஏற்படுத்துவதில் பங்களிப்பு செய்கின்றது. அதுமட்டுமல்லாமல் சில ஆசிரியர்கள் மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்காது தூற்றுவதும் குறைபாடாக காணப்படுகின்றது.
பரீட்சை புள்ளியை அடிப்படையாகக் கொண்டு அழுத்தம் கொடுப்பதனால் மாணவர் மத்தியில் இணைப்பாட விதான செயற்பட்டிற்கான ஆர்வம் குன்றிவிடுகின்றது. அவ்வாறில்லாமல் மாணவர்களை ஊக்கமளித்து உச்சாகமூட்டி இணை செயற்பாடுகளில் பங்கெடுத்து கொள்ளச் செய்வதும் தமது கடமையாகும் என்தனை உணர்ந்து செயற்படுதல் அவசியமாகின்றது.
இணைப்பாட செற்பாடுகள்
தொடர்பாக ஆசிரியரிடம் சலிப்புத்தன்மை ஏற்படும் போது அதனை ஊக்குவிப்பதிலும் வெறுப்புணர்வை
வெளிப்படுத்தும் ஆசிரியர்கள் இன்னும்
காணப்படுகின்றனர். (எடுத்துக்காட்டாக இதனை குறப்பிடலாம் சமூக விஞ்ஞான போட்டிக்கு
தெரிவான மாணவன் ஒருவன் தனது மேலதிக பயிற்சியினை பாடசாலையில் கற்றல் நேரத்தில்
ஈடுபடுகின்றான் இதனால் குறித்த பாடவேளைக்குறிய ஆசிரியர் அதனை ஏற்றுக் கொள்வதில்லை.
இச் சந்தர்ப்பங்களில் ஆசிரயர்களுக்கிடையே முரண்பாடும் ஏற்படுகின்ற நிலைமையையும்
காணப்படுகின்றது.)
பரீட்சை புள்ளி, சிறந்த பெறுபேறு உயர்கல்வியை பெற்றுக்கொள்ளுதல் போன்ற இலக்கினை கொண்ட கல்வியினால் தற்காலத்தில் சமூகத்திறன்கள்,தன்னம்பிக்கையின்மை,சவால்களை வெற்றிகொள்ளும் திறனின்மை மற்றும் தலைமைத்துவ ஆற்றலின்மை போன்ற பிரச்சினையுடையவாறாக மாணவர்கள் உருவாவதற்கு காரணமாக அமைகின்றது.
பரீட்சையை மட்டும்
இலக்காக கொண்டு தயார்படுத்தப்பட்ட மாணவன் சிறந்த பெறுபேற்றை பெற்ற போதும் வெளியுலகை
வெற்றிகொண்டு தனக்கென வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் தொழினை பெற்றுக்கொள்வதற்கு
இன்னுமொருதரை எதிர்பார்த்து நிற்கும் நிலை காணப்படுகின்றது. ஆகவே ஆசிரியரானவர்
இவ்வாறானதொரு நிலைமையை மாணவன் வெற்றிகரமாக எதிர்கொள்ளச் செய்வதற்கு இணைகலை
செயற்திட்டங்களில் ஈடுபடுத்தி எதிர்காலத்தினை வெற்றிகொள்ளும் பலசாலியாக உருவாக்க
வேண்டும்;.
மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்குமிடையே இணைகலைத்திட்டம் தொடர்பாக எப்போதும் அச்சநிலைமையே காணமுடிகிறது. பெற்றோர்கள் தமது பிள்ளையின் உயர்கல்வியை நோக்கி பெறுபேற்றினை அடிப்படையாக கொண்டு தமது பிள்ளைக்கு கல்வியை வழங்க எத்தனிக்கின்றனர். அதனால் இருவருக்குமிடையே அச்சநிலை ஏற்படுகிறது.
இந்நிலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி சில ஆசிரயர்கள் தமது பொறுப்புடமையில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். அவ்வாறில்லாமல் ஆசிரியர் அதன் அவசியத்தினையும் கல்வியின் பொருத்தப்பாட்டினையும் பெற்றோருக்கு தெளிவுறுத்தி மாணவனிடமும் பெற்றோரிடமும் இணைகலைத்திட்ட செயற்பாடுகளை ஊக்குவிப்பு செய்தல் வேண்டும்.
பெற்றோர்கள்
தற்காலத்தில் தமது பிள்ளைகள் பரீட்சையில் ஏனைய மாணவர்களை விட அதிக புள்ளியை
பெறவேண்மெனவே சிந்திக்கின்றனர் அதனாலே தமது பிள்ளை எதிகாலத்தில் உயர்ந்த இடத்தை
அடைவான் என எண்ணுகின்றனர். ஆனால் இணைகலைத்திட்டத்தின் மூலம் தனது பிள்ளை
சமூகத்தில் உயர் நிலையை அடைய முடியும் என்பதனையும் பெற்றோருக்கு தெளிவுபடுத்துவது
ஆசிரியரின் பொறுப்பாகின்றது.
இணைப்பாட செயற்பாடானது மாணவர் நலநனை மேம்படுத்தும் வளமாகும். என்பதனை அறிந்த ஆசிரியர் ஒவ்வொருதரும் சிறந்த ஆசிரியராக விளங்கமுடியும். இச் செயற்திட்டம் தொடர்பாக ஆசிரியரிடம் தெளிவான எண்ணக்கரு ஒன்று காணப்படும் போதுதான் பாடசாலையிலும் சிறப்பாக இணைகலைத்திட்டத்தினை வெற்றிகரமானதாக முன்னெடுத்துச் செல்லமுடிகின்றது.
ஒவ்வொரு ஆசிரியரும் தனது
வெற்றிகரமான கற்பித்தலுக்கு அப்பால் மகிழ்ச்சிகரமான கற்பித்தல் அல்லாத செயற்பாடு
ஒன்று மாணவனை வளப்படுத்துகின்றது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதுவே
இணைப்பாடவிதான செயற்பாடுகள் என்பதனையும் தெளிவுறுத்துவது திண்மமாகும்....
0 கருத்துகள்