சிறப்பான கற்றல் - கற்பித்தல் செயற்பாடு வகுப்பறையில் நிலவ வேண்டுமானால் வகுப்பறைக் கட்டுப்பாடு சிறந்ததாக அமைய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. வகுப்பறையின் முகாமையாளர் என்ற ரீதியில் ஆசிரியர் இக்கட்டுப்பாட்டை ஏற்படுத்pக் கொள்ள வேண்டுமென்ற நியதி இருப்பினும், அதிபர் இதனுடன் தொடர்பான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டுமென ஆசிரியர் விரும்புவர். வகுப்பறை முகாமைத்துவம் என்பது ஆசிரியரது கடமைக்கூறுகளில் ஒன்றாகும். ஆசிரியர் வகுப்பறை முகாமைத்துவப் பணியில் ஈடுபடும்போது தோல்வியடைந்தால் அவர் பின்பு வகுப்பறைச் செயற்பாட்டிகளிலும் தோல்வியையே எதிர்கொள்ள நேரிடும்.
புதிய சிந்தனையில் வகுப்பறைக் கட்டுபப்பாடு என்னும் சொல்லை “ஆசிரியரும் மாணவர்களும் இணைந்த ஒருமைப்பாட்டுடன் தங்களுடைய நோக்கங்களையும், அடைவுகளையும் அடைந்து கொள்வதற்காக, ஈடுபடுவதற்கு ஏற்ற இடமாகமும் ஒருவருக்கொருவர் ஆதரவாக செயற்படுகின்ற கவின் நிலை கொண்டதாக வகுப்பறையை முழுமையாக மாற்றுகின்ற முயற்சியே வகுப்பறை முகாமைத்துவம் எனப்படும்”. வகுப்பறை முகாமைத்துவமானது வகுப்பறையை நிர்வகித்தல், திட்டமிடுதல், ஒழுங்குபடுத்துதல், வழிநடத்துதல், நிர்வாகம் செய்தல் போன்ற பல செயற்பாடுகள் கொண்டதாக காணப்படுகின்றது.
பாடசாலை ஒன்றின் அங்கத்தவர்களுடைய செயற்பாடுகளை ஒருங்கிணைப்புச் செய்யும் நோக்குடனும் பாடசாலையின் பல வேறுபட்ட பணிகளை நிறைவு செய்து கொள்ளும் வகையில் பாடசாலையின் வளங்களை இயலுமான வரை உச்சப் பயன்பாடுகள் உள்ள வகையிலும் வினைத்திறனுடனும் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு செயற்கிரமமாக வகுப்பறை முகாமைத்துவம் காணப்படுகின்றது.
வகுப்பறையிலுள்ள அனைத்து மாணவர்களும் சம அளவில் திறமையையோஃஅறியையோ கொண்டிருக்கமாட்டார்கள். வகுப்பறையில் ஒவ்வொரு மாணவனினதும் தனித்திறமைகள், விருப்பு வெறுப்புக்கள், தேவைகள் போன்றவற்றை வேறுபடுத்தி அறிந்து கொள்வதன் மூலம் வகுப்பறையின் வெற்றிகரமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு வழிவகுக்கின்றது.
கல்விச் செயற்பாடுகள் இடம்பெறும் அடிப்படை அலகுகளாக வகுப்பறைகள் காணப்படுகின்றன. எனவே வகுப்பறை பயன்தருதன்மையுடையதாகவும் வினைத்திறன்மிக்கதாகவும் நிருவகிப்பது அவசியம். இச்சந்தர்ப்பத்தில் வகுப்பாசிரியரின் வகிபங்கு வகுப்பறை முகாமையாளராக மாறுகிறது. ஒவ்வொரு ஆசிரியரினதும் முக்கிய பணி கற்பித்தல் செயற்பாடுகளை வெற்றிகரமான முறையில் முன்னெடுத்துச் செல்வதாகும். வகுப்பறையை சரியான முறையில் முகாமை செய்யாவிட்டால் இந்தப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்ள முடியாது. இதனால் ஆசிரியருக்கு வகுப்பறை முகாமைத்துவம் பற்றிய அறிவு, விளக்கம், ஆற்றல் என்பன மிகவும் அத்தியாவசியமானதாக அமைகின்றது.
கற்பித்தலும் வகுப்பறை முகாமைத்தவமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்ற அடிப்படைஉண்மையை வகுப்பாசிரியர் ஒருவர் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். வகுப்பறையில் நிகழும் இடைத்தாக்கம் இரண்டு பரிமாணங்களையுடையது. அவை கற்பித்தல் சார்ந்ததும் நிருவாகம் சார்ந்ததும் ஆகும். கற்பித்தல் பணியின் வெற்றி குழுக்களைக் கட்டுப்படுத்தல். காலத்தைச் சரியாகப் பயன்படுத்தல், கற்றல் சாதனங்களை ஒழுங்குபடுத்துதல், தொடர்பாடல் மற்றும் அவருக்கேயுரியமுறையில் தன்னை வெளிப்படுத்தல் போன்ற ஆசிரியருடைய ஆற்றலிலேயே தங்கியிருக்கின்றது. உண்மையில் இவையே ஆசிரியருடைய ஆற்றலாகும்.
ஓர் ஆசிரியர் உயர்ந்த கல்வித் தகைமைகளை பெற்றிருக்கலாம். அவை அவருடைய அறிவுக்குச் சான்றாக இருக்கலாம். ஆயினும் அவர் கற்பித்தல் முறைகளையும் சாதனங்களையும் பயன்படுத்துவதில் நன்கு பயிற்சியும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். பிள்ளைகளிடம் விரும்பத்தகுந்த அறிவுசார் விளக்கம் ஏற்படும் வகையில் ஆசிரியர்கள் சிறந்த நிருவாகத்தினூடாகத் தமது பணிகளைச் செய்யவும், தமது கற்பித்தலை முன்வைக்கவும் முடியும். இதற்கமைய வகுப்பறை முகாமைத்துவம் என்பது கற்றலுக்கு சாதகமான ஒரு வாய்ப்பினை உருவாக்கும் செயற்பாடு என்பது தெளிவாகின்றது.
வகுப்பறை நிருவாகப்போக்கின் போது பின்வருவனவற்றை கருத்தில் கொள்ளப்படும்.
ஆசிரியர் மாணவர் இடைத்தொடர்பு.
மாணவரின் விருப்பு வெறுப்பு.
மாணவர் அறியாமை.
மாணவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் .
ஊக்கல்.
ஆசிரியரின் கருத்துக்கள்.
வகுப்பறை நிர்வாகத்தின் மூலம் ஆசிரியர் பல்வேறுபட்ட நன்மைகளை அடைகின்றார். அவற்றை நோக்குவோமானால்,
மாணவர்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் போது மாணவர் விருப்புடன் கற்கின்றனர்.
ஆசிரியர் மாணவர் இடைத் தொடர்பு அதிகமாகக் காணப்படுவதனால் இடர்படும் மாணவர்களை அறிந்து மாணவர்களை வழிப்படுத்துவதுடன் பொருத்தமான பின்னூட்டலை மேற்கொண்டு மாணவர் மத்தியில் உள்ள இடர்பாடுகளை நீக்க முடியும்.
சிறப்பான பாடத்திட்டமிடலை மேற்கொண்டு கற்ப்பித்தலில் வெற்றிகொள்வதற்கு வாய்;ப்பாக உள்ளது.
குறித்த காலப்பகுதியில் குறித்த தேர்ச்சியை மாணவர்களை அடையச் செய்ய வழிவகுக்கின்றது.
ஆசிரியரின் கருத்துக்களை ஏற்று மாணவர்கள் நல்வழியில் நடக்க வாய்ப்பாக அமைகின்றது.
மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற வீட்டுப்பயிற்சி வேலைகளை மாணவர்கள் ஆர்வத்துடன் செய்துவர தூண்டுதலாக உள்ளது.
மாணவர்களின் வரவை அதிகரிக்கவும், இடைவிலகலை தவிர்க்கவும் வாய்ப்பாக உள்ளது.
மாணவர்களின் பல்வேறு திறன்களை வெளிக்கொணர்ந்து விருத்தி செய்ய வாய்ப்பாக உள்ளது.
நாம் எப்போதும் நேரடியாக கற்பிப்பதில்லை. சூழல் எனும் வழிமுறையினூடாக மறைமுகமாகக் கற்பிக்கின்றோம். கற்பித்தல் சூழல் நிலைமை இரண்டாகும். ஒன்று இயல்பாக நிலவுகின்ற சூழலில் கற்றல் பணிகள் இடம்பெறுவது, மற்றயது கற்பித்தலுக்கேற்ற சூழலை நாம் உருவாக்குவதும். இவை இரண்டிற்குமிடையில் பாரிய வேறுபாடுண்டு. கல்விச் செயற்பாட்டிற்கேற்ற சூழலினை ஒழுங்கு செய்வதன் மூலம் கற்றல் ஆர்வம் தூண்டப்படுகின்றது. அதனால் மாணவர்களிடம் இயல்பாகவே விருப்புடன் கற்கும் நிலையையும் உருவாக்கிக் கொள்ள முடிகின்றது.
வினைத்திறனுடைய வகுப்பாசிரியர் ஒருவர் மாணவர்களிடையே இடைத்தொடர்புகளைத் தூண்டக்கூடியவாறும், கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளைப் பயனுடையதாகவும் ஒழுங்கு செய்ய முயலுவார். நன்கு ஒழுங்கு செய்யப்பட்ட அழகியல் ரீதியாக, கவருகின்ற வகுப்பறைச் சூழல் எப்போதும் ஒரு ஆசிரியர் போல் விளங்கும். இவ்வாறாக ஒழுங்கு செய்யப்பட்ட வகுப்றையில் மாணவர்களுடைய நடத்தையும் சிறப்பாக இருக்கும். அவர்கள் தனிப்பண்புகளை உடையவர்களாகவும் இருப்பர்.
மாணவர்களிடையே திருப்தியின்னை, போர்க்குணங்கள், ஈடுபாடு குறைதல் போன்றவை ஏற்படுவதற்கு மாணவர் தொகையை அதிகமாகக் கொண்ட வகுப்பறைச் சூழலும் ஒரு காரணமெனக் கூறமுடியும். இவ்வாறான நிலைமையில் ஆசிரியர் மாணவர் இடைத் தொடர்பு அதிகமாகக் காணப்படாமையினால் இடர்படும் மாணவர்களை அறிந்து மாணவர்களை வழிப்படுத்துவது, பொருத்தமான பின்னூட்டலை வழங்கி மாணவர் மத்தில் உள்ள இடர்பாடுகளை நீக்குதல் என்பன சிக்கலாகின்றது. இதனை தவிப்பதற்காக வகுப்பறை முகாமைத்துவத்தினை பேணுவதன் மூலம் மாத்திரமே தவிர்க்க முடிகின்றது.
ஆசிரியரானவர் தனது நிபுணத்துவத்தினைப் பயன்படுத்;தி வகுப்பறைக் கற்பித்தலில் மிகவும் முக்கிய இடத்தைப் பெறுவது பாட அறிமுகமாகும். பாடத்தினை ஆரம்பிக்கும் போது ஆசிரியர் கற்பிக்கின்ற விடயத்தை மாணவர்களின் மனதில் நிலைப்படுத்திக் தக்க வைத்துக் கொள்வதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்படல் வேண்டும்.
மாணவர்களின் சிந்தனையில் காணப்படும் கவனகலைப்;பானை நீக்கி புதிய உற்சாகத்தைக் கொடுப்பதன் மூலம் மாணவர்களும் கற்றலில் உத்வேகத்தைக் காட்டுவர். எனவே, ஆசிரியர் கற்பிக்கப்போகும் நேரத்தில் அவருடன் சேர்ந்து கற்றலில் ஈடுபடுவதற்கேற்ற தயார்நிலையில் மாணவர்களின் மனப்பாங்குகள் இருக்க வேண்டியது அவசியமாகும். சிறந்த முறையில் திட்டமிட்டு செயலாற்றுவதன் மூலமே மாணவர்களை கற்றலில் விரைவாக ஈர்த்துக்கொள்ள வகுப்பறை முகாமைத்துவம் அவசியமாகின்றது.
பிள்ளைகள் தொடர்பான பலவீனங்கள் அல்லது பிரச்சினைகளைத் இலகுவாக தீர்த்துக் கொள்வதற்காக பெற்றோருடன் நல்லுறவைப் பேணி ஏற்படுகின்ற நெருக்கடியான நிலைமைகளை சுமுகமாக தீர்த்துக் கொள்வதற்கு வழி செய்கின்றது.
குடும்பச் சூழலை அறிந்து கொள்வதால், ஒவ்வொரு பிள்ளையினதும் தேவைகளை ஆசிரியர் இனங்காண்பதால், அந்த மாணவர்களின் தேவைகள் நிறைவு செய்வதற்கும், அவர்கள் மீது சிறப்பான அக்கறையைக் காட்டவும் வாய்ப்புக்கள் ஏற்படும் இவ்வாறான அணுகு முறைகளினால், வகுப்பறையின் அமைதி, நிறைந்த கவிநிலை, மாணவர்களின் ஒழுக்கம் என்பன சிறப்பாகப் பேணப்படும்.
வகுப்பறை நிர்வாகம் அல்லது வகுப்பறை முகாமைத்துவம் என்பது வகுப்பறையை சிறந்த கவர்ச்சிகரமான கவிநிலையைக் கொண்டதாகப் பேணிக் கொள்வது மட்டுமல்லாது, பிள்ளை அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றை முழுமையாக அடைந்துகொள்ளும் வகையில் ஆளுமை ஒரு ஆசிரியர் கவனம் எடுத்து பல்வேறு நுட்பங்களைக் கொண்டதாக வகுப்பறையை மாற்றியமைப்பதுவே வகுப்பறை முகாமைத்துவத்துவம் ஆகின்றது. அப்பொழுதுதான், வினைத்திறன் மிக்க வகுப்பறை மேம்பாடு என்பது வெளிப்படையாகத் தெரியவரும். இதனூடாகவே பிள்ளைகளின் விளைதிறன் மிக்க ஆளுமை விருத்தியும் வெளித்தோன்றும்.
0 கருத்துகள்