பல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தேவையற்ற நடத்தைகளைக் கட்டுப் படுத்தும் வகையிலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு அணுகுமுறையே வகுப்பறை முகாமைத்துவமாகும். வகுப்பறையானது நன்கு கட்டமைக்கப்பட்ட கற்றல் கவிநிலையை ஏற்படுத்துவதாகவும், தீய நடத்தைகளைக் கட்டுப்படுத்தி, கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக் கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இவற்றை அடைவதற்கேற்ற தெளிவாக வரையறை செய்யப்பட்ட சட்ட விதிகளைக் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும்.
ஆசிரியர் ஓர் முகாமையாளராக பல பொறுப்புக்களை கொண்டுள்ளார்.
திட்டமிடல்.
ஒழுங்கமைத்தல்.
வழிப்படுத்தல்.
தொடர்பாடல்.
அறிக்கைப்படுத்தல்.
தலைமைத்துவம்
உண்டாக்கல்.
வரவு செலவுக்குட்படுத்தல்.
வகுப்பறைகளை மேம்படுத்துவதில் வகுப்பாசிரியரின் பணியும்,கவனிக்கவேண்டிய விடயங்களும்
வகுப்பறையினை மேம்;படுத்துவதில்
ஆசிரியர் கொண்டுள்ள பொறுப்புக்களை நாம் பின்வரும் விடயங்களினூடாக ஆராய்ந்து
நோக்கலாம்.
1. ஆசிரியரின் தலைமைத்துவப் பொறுப்புக்கள்.
குழுவினது புலனை அல்லது சிந்தனையைக் கற்றலுக்குக் கொண்டுவருதல்.
கற்றலுக்கான பயனுள்ள சூழலை உருவக்குதல்.
விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளல்.
கற்றல் செயற்பாட்டில் ஈடுபட மாணவர்களை
ஊக்குவித்தல்.
ஓர் ஆசிரியர் ஜனநாயகப் போக்கைக் கொண்டவராக அமைதல் வேண்டும்.
ஓர் ஆசிரியர் மாணவரை இனங்காண பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை மேற்பார்வை,பரிசோதனை,எழுத்து,வாய்மொழிப் பரீட்சை,பிரதிபலிப்பு அறிக்கை போன்றவை ஆகும்.
ஓர் ஆசிரியர் பல்வேறு தேவைக் கொள்கைகளை பூர்த்தி செய்பவராக அமைதல் வேண்டும்.
உதாரணம் : உடலியல் தேவை,பாதுகாப்புத் தேவை,அன்புத் தேவை,கணிப்புத் தேவை, சுயதிறனில் நிறைவுத் தேவை
2. வகுப்பறைகளின் பௌதிக நிலையை மேம்படுத்துதல்:
வகுப்பு ஆசிரியர் தனது மாணவர்கள் பயன்படுத்துகின்ற பௌதிக வளங்கள் தொடர்பாக
கவனத்தில் கொள்ளவேண்டும்.
வகுப்பறையில் காணப்படும் பௌதிக வளங்கள் பயன்படுத்த முடியாத வகையில்
உடைந்திருக்கின்றனவா? அல்லது
மாணவர்களின் தொகைக்கு பற்றாக்குறையாக
உள்ளனவா? அல்லது மாணவர்களின்
வயது, உயரம் என்பவற்றிகேற்ப
பொருத்தமற்றவையாக உள்ளனவா? என்பதில்
கவனத்தைச் செலுத்தி இவற்றை மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடுகளை வகுப்பு ஆசிரியரே
மேற்கொள்ளுதல் வேண்டும்.
வகுப்பறைக்கு போதியளவு வெளிச்சம்,
காற்றோட்ட
வசதிகள், மழை நேரங்களில்
ஏற்படும் நீர்க்கசிவுகள் அல்லது தூறல்,
மற்றும்
வகுப்பறைச் சூழலை மாசுபடுத்தும் புற ஒலிகளின் தலையீடுகள் என்பன இருக்குமாயின்
அவற்றைக் கவனித்து, இது தொடர்பாக
அதிபர், மற்றும்
பெற்றோர்களுடனான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவற்றிற்கான தீர்வுகளைக் காண
நடவடிக்கை எடுத்தல். மாணவர்களின் சுய ஆக்கங்களைக் கொண்டு வகுப்பறைச் சுவர்களில்
காட்சிப்படுத்தி அழகுபடுத்துவது ஒவ்வொரு மாணவரையும் அங்கீகரிப்பதுடன் அவர்களை
ஊக்குவிப்பதாகவும் அமையும்.
3. மாணவர் நடத்தைகளில் கவனம் செலுத்துதல்:
தனிநபர்களை,குழுவைஇனங்காணுதல்
மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகச் செயற்படும் பொழுதோ அல்லது தனியாக இருக்கும் பொழுதோ அவர்களுடைய நடத்தைகளை
அவதானிக்க வேண்டும்.
மாணவர்கள் குழுக்களாக இயங்கும் பொழுது அவர்களுடைய நடத்தைகள், மற்றவர்களுடன் பழகும் தன்மை
பயன்படுத்தப்படும் பேச்சு மொழிகள் என்பவற்றை அவதானித்து வரவேண்டும். அதேவேளை
ஒவ்வொருவரினதும் நண்பர்கள் தொடர்பான விழிப்புணர்வையும் ஆசிரியர்கள் மேற்கொண்டு
அதற்கேற்ப உரிய வழிகாட்டல்களைச் செய்ய வேண்டும்.
பெற்றோருடன் உரையாடல்:
வகுப்பு ஆசிரியருக்கும், வகுப்பறையில்
உள்ள பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும் இடையில் நல்லுறவு பேணப்படுதல் வேண்டும்.
பிள்ளைகள் தொடர்பான முன்னேற்றம்,
அவர்களது
நடத்தைகள், பழக்கவழக்கங்கள், பேசும் மொழி தொடர்பான கலந்துரையாடல்களை
பெற்றோர்களுடன் மேற்கொள்ளவேண்டும். மேலும் சிறப்பான உறவு முறையை வளர்க்க வேண்டு
மானால் வகுப்பு ஆசிரியர் தனது மாணவர்களின் வீட்டிற்குச் சென்று பெற்றோருடன்
கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன்,
வீட்டுச்
சூழலையும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறான நல்லுறவைப் பேணுவதன் மூலம்
பின்வரும் அனுகூலங்களை ஆசிரியர் அடைந்து கொள்வர்.
குடும்பச் சூழலை அறிந்து கொள்வதால்,
ஒவ்வொரு
பிள்ளையினதும் தேவைகளை ஆசிரியர் இனங்காண்பதால், அந்த மாணவர்களின் தேவைகள் நிறைவு செய்வதற்கும், அவர்கள் மீது சிறப்பான அக்கறையைக்
காட்டவும் வாய்ப்புக்கள் ஏற்படும் இவ்வாறான அணுகு முறைகளினால், வகுப்பறையின் அமைதி, நிறைந்த கவிநிலை, மாணவர்களின் ஒழுக்கம் என்பன சிறப்பாகப்
பேணப்படும்.
இவ்வாறான கலந்துரையாடல் பிள்ளை மையமாக இருப்பதால் பிள்ளைகளின் குறைபாடுகள், நிறைவுகள், அவர்களது தேவைகள் பற்றிய மதிப்பீடுகள் மேற் கொள்ளப்படும்.
இதனால் குறித்த வகுப்பில் உள்ள எல்லா மாணவர்கள் மீதும் ஆசிரியர்களின் கவனம்
ஈரக்கப்படும். இதனால் ஒட்டு மொத்தமாக அனைத்து மாணவர்களும் உயர்ந்த விழுமியங்களைப்
பெற்றுக் கொள்வதுடன் கல்வியில் உயர்ந்த அடைவு மட்டத்தையும் அடைந்து கொள்வர். இது
பாடசாலைகளில் நடைமுறையில் உள்ள தரவட்டம் போன்று வகுப்புத் தரவட்டமாக இருப்பதால்
அந்த வகுப்பின் தரமும் உயரும்.
4. நிபுணத்துவ ஆசிரியர் உதவிகள் பெறல்:
தேவை ஏற்படும் இடத்து சில துறை சார்ந்த நிபுணத்துவ ஆற்றல் கொண்ட ஆசிரியர்களையோ
அல்லது பாடசாலைக்கு வெளியில் இருந்து வளவாளர் களையோ அதிபரின் உதவியுடன் ஒழுங்கு
செய்து வகுப்பில் விசேட செயலமர்வுகளை நடத்துதல். இது ஒரு மாற்றத்திற்கான
வழியாகவும் இருக்கும்.
5. கற்றல் மேம்பாடு.
வகுப்பறையின் பிரதானமான குறிக்கோளாக அமைவது மாணவர்களின் கற்றலை மேம்பாடடையச்
செய்தலே. அந்த வகையில் மேலே குறிப்பிட்ட
விடயங்களுடன் கற்றல் மேம்பாட்டிலான கவனம் ஒவ்வொரு ஆசிரியரினாலும் எடுக்கப்பட
வேண்டும். கற்பித்தல் செயற்பாடு திட்டமிடப்பட்ட முறையிலான ஒழுங்கு, இலகுவாக மாணவர்கள் புரிந்து கொள்ளும்
வகையிலான எளிமை, புதியவிடயங்களைக்
கொண்ட உள்ளடக்கம், மாணவர்
மகிழ்ச்சியுடன் கற்றல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய தன்மை என்பவற்றைக் கொண்டதாக
இருத்தல் வேண்டும். அதேவேளை மாணவர்களின் வயது மற்றும் வகுப்புக்குப்
பொருத்தமானதாகவும் அமையுமானால் வகுப்பறை முகாமைத்துவம் என்பது மகிழ்ச்சிகரமான
சூழலில் காணப்படும்
6. கற்றல் இடர்ப்பாடு இனங்காணல்:
ஒரு பிள்ளை கற்றலின்போது எய்த வேண்டிய தேர்ச்சியை எய்த இயலாமல் தத்தளிக்கும்
நிலையே கற்றல் இடர்ப்பாடு ஆகும். இதற்கான காரணங்களை இனங்காண்டு தீர்த்து வைக்கும்
தலையாய பொறுப்பு ஆசிரியருடையதாகும்.
7.. கற்றல் சூழலை மாற்றுதல்:
மாணவர்களிடையே ஏற்படும் கற்றல் இடர்ப்பாடுகளை நீக்குவதற்கு ஒரு ஆசிரியர் வகுப்பறைச் சூழலில் மாற்றத்தை
ஏற்படுத்த வேண்டும். அத்துடன் கற்றல்
கற்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய இடர்ப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒழுங்கு
முறைகளைக் கையாள வேண்டும்.
8. கற்றல் குழக்களை உருவாக்கல்:
வகுப்பில் கற்றலுக்கான சூழலை ஏற்படுத்தவேண்டுமாயின் மாணவர் குழுக்களுக் கிடையே
ஒத்த தன்மையை ஏற்படுத்தவேண்டும். வெவ்வேறு சிந்தனை, இலக்கு, மாறுபட்ட குடும்பச் சூழல்
போன்றவற்றிலிருந்து வரும் பிள்ளைகளுக்கிடையே ஒருங்கிசைவை ஏற்படுத்தும் வகையில் அவர்களைக் குழுக்களாக்கி கற்பதற்கான
குழு ஒருமைப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு வகையான
கற்றல் செயற்பாட்டை வழங்கவேண்டும். அவற்றை பின்னர் குழு ரீதியாக
முன்னளிக்கைப்படுத்த வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு தடவை குழு
உறுப்பினர்களை மாற்றி புதிய ஒரு கற்றல் குழுவை உருவாக்கவேண்டும். இவ்வாறு
தொடர்ச்சியாகக் கற்றல் குழுக்கள் உருவாக்கப்படும் பொழுது ஒவ்வொருவரிடமும் தாமாகவே
கற்க வேண்டும் என்ற உந்து சக்தி உருவாக்கப்படும்.
5. மாணவர் செயற்பாடுகளை ஊக்குவித்தல்:
ஒரேவகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் எல்லோரும் ஒரே தரத்தில் உள்ளவர்கள் என்ற
எடுகோளுடனேயே வகுப்பு ஆசிரியர் தனது கற்பித்தல் செயற்பாட்டை ஆரம்பிக்க வேண்டும்.
பழைமைமுறையான ஆசிரியர் மையக் கல்வியில் இருந்து மாணவர் மையக் கல்விக்கான வாய்ப்பை
ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். இதனால் மாணவர்களுக்கான சமமான வாய்ப்பு, ஊக்குவிப்பு, வினைத் திறன் மிக்க செயற்பாடுகள், தன்னம்பிக்கை வளர்தல், குழுச்செயற்பாட்டில் ஆர்வம் ஏற்படுதல்
என்பன வளர்த்தெடுக்கப்படும்.
6. மதிப்பீடு:
கற்றலையும் கற்பித்தலையும் முன்னேற்றுவதற்கு உதவும் வகையில் மாணவர்களின் அறிவு
மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல். ஒரு வகுப்பறையில்
மேற்கொள்ளப்படும் மதிப்பீடு அளவு சார் மதிப்பீடாகவோ அல்லது பண்பு சார்
மதிப்பீடாகவோ இருக்கலாம். இவ்வாறான மதிப்பீடுகள் ஒரு மாணவனின் அடைவு மட்டத்தை
உயர்த்த உதவுதுடன் பாடத் தேர்ச்சி தொடர்பான
தெளிவையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். மதிப்பீடு என்பது மாணவர்களை
ஊக்குவித்து முன்னேற்றமடைய வைக்கவேண்டுமே ஒழிய அவர்களைப் பலவீனப்படுத்துவதாகவோ
அல்லது நம்பிக்கை இழக்கவைப்பதாகவோ இருக்கக்கூடாது.
ஒவ்வொரு மாணவரும் தமது கற்றல்
திறனையும், தான் எங்கே
நிற்கின்றேன் என்பதையும் தாமே மதிப்பிட்டுக் கொள்ளுதலே சுயமதிப்பீடாகும். இவ்வாறான
சுய மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்களையும், ஆலோசனை களையும் வகுப்பு ஆசிரியர்
வழங்கவேண்டும். இவ்வாறான சுய மதிப்பீடுகள் அடுத்த கட்டத்தில் தான் என்ன
செய்யவேண்டும் என்ற சரியான தீர்மானத்தை எடுப்பதற்கும் உதவும்.
7. உடனடியான பின்னூட்டல்:
கற்றலையும் கற்பித்தலையும் மேலும் முன்னேற்றமடையச் செய்வதற்கு உதவக் கூடிய ஒரு
முக்கியமான செயற்பாடாக அமைவது பின்னூட்டலாகும். அதுவும் எப்பொழுதும்
பின்னூட்டல்கள் உடனடியாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். காலம் தாழ்த்திய
பின்னூட்டல்கள் பயனற்றதாகவே போய்விடும். இவ்வாறு பின்னூட்டல் களை மேற்கொள் வதன்
மூலம் தமது தவறுகளைத் தாமே திருத்திக் கொள்வதற்கும் சரியானவற்றைச் சரியாகவும்
சரியான நேரத்திலும் செய்வதற்கும் உதவும். அதேவேளை அடைவு மட்டத்தை உயர்த்திக்
கொள்ளவும் முடியும். மிக இலகுவான,
வினாக்களை
மாணவர்களிடம் வினாவுதல் என்பதும் மிக எளிமையான பின்னூட்டலாக அமையும்.
8. இணைப்பாட விதான செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல்:
பாடசாலையில் நடைபெறுகின்ற கலை நிகழ்வுகள்,போட்டிகள்,விளையாட்டு,பரீட்சைகள்,சுற்றூலா போன்ற பல்வேறுபட்ட இணைகலைத்திட்ட செயற்பாடுகளில் மாணவர்களை பங்காற்றச் செய்வதன் மூலம் அவர்களின் திறமைகள்,எண்ணங்கள்,சிந்தனைகளை போன்றவற்றை வளர்த்தெடுத்தல்...
மேற்படி விடயங்களினூடாக ஆசிரியர் தான் கொண்டுள்ள தலையாய கடமைகள், பொறுப்புக்கள் எவை என்பதனை மிக எளிமையாக
புரிந்து கொள்ள முடிகின்றது.
0 கருத்துகள்