பாடசாலையில் ஆசிரியரின் தலைமைத்துவ வகிபாகம்

ஒவ்வொரு ஆசிரியரினதும் ஆற்றல்கள் ஒன்றாக இணைந்தே முறையான ஒரு பாடசாலையை தோற்றுவிக்கின்றது. அவ்வாறு தோற்றுவிக்கப்படுவதன் விளைவாக ஆற்றல் மிக்க சமுதாயம் தோற்றுவிக்கப்படுகின்து. சிறந்த சமுகத்தை உருவாக்குபவர் என்னும் அடிப்படையில் ஆசிரியரின் தலைமைத்துவ வகிபாகமானது ஆழமான ஒரு செயற்பாடாகும். தனது தலைமைத்துவத்தின் பண்பிலையே எதிர்கால நாட்டின் தலைவரும் சாதாரண குடிமகனும் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைகின்றது. சிறந்த தலைமைத்துவம் காணப்படின் சிறந்த பிரஜைகளை உருவாக்கப்படுபவார்கள். தவறான தலைமைத்துவம் காணப்படின் நலிவான சமூகத்தினையே தோற்றிவிக்கும். 

 பாடசாலையில் ஆசிரியரின் தலைமைத்துவ வகிபாகம்

சிறந்த ஆசிரிய தலைமைத்துவம் என்பது குறித்த மாணவக்குழுவின் வெற்றியாகும் இவ் வெற்றியானது சிறந்த தலைமைத்துவத்தின் வழிப்படுத்தலின் பெறுபேறாகின்றது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட  இலக்கினை அடைந்து கொள்ளப்படுகின்றது. இதனாலையே கல்விசார் கல்விசார செயற்பாடுகளிலும் தலைமைத்துவம் என்பது அவசியமாகின்றது.  மாணவர்களுக்கு சிறந்த கல்வியையும், அறிவு, திறன், மானப்பாங்கினையும் என்பவற்றினை வழங்கி மாணவர்களிடமிடமிருந்து வெளியீடுகளை பெற்றுக் கொள்ள முடிகின்றது..

மாணவர்கள் எப்போதும் ஆசிரியர்களை தமது முன்னுதாரணமாகவும் தலைவர்களாகவும் கொள்ளுகின்றனர். அந்தவகையில் ஒவ்வொரு ஆசிரியரினதும் செயற்பாடும் ஒவ்வொரு மாணவரினதும் தலைமைத்துவ பண்பாகின்றது. 


பாடசாலையில் தலைமைத்துவ விருத்தியில் ஆசிரியர்

முன்மாதிரியாக இருத்தல்.

வழிகாட்டுதலும் கலந்துரையாடுதலும்

தலைமைத்துவ குழுக்களை உருவாக்குதல.

பொறுப்புணர்வு

பாரபட்சமின்மை

தீர்மானம் எடுத்தல்

வகைகூறும் பங்கு

சமூகப் பிரசை 

                  இவ்விடயங்களின் மூலம் ஆசிரியரானவர் மாணவர் மத்தியில் தலைமைத்துவத்தை விருத்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றார்.  

ஆசிரியர் எப்போதும் மாணவர்களின் முன்மாதிரியாகவே திகழ்கின்றனர். மாணவர்களின் முன் ஆசிரியர் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர்களின் அடி மனதில் விரைவாக பதிந்து விடுகின்றன. தொடடில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்னும் பழமொழி வழக்கில் உண்டு என்பது அனைவரும் அறிந்ததொன்றாகும். அந்தவகையில் மாணவன் பாடசாலைக்கு காலெடுத்து வைக்கும் போது அவனை அரவனைத்து அன்பை வெளிப்படுத்துபவர் ஆசிரியராவார். 

அதனால் மாணவனும் ஆசிரியரி மீது அன்பு கொண்டு அவர்களுக்கு கீழ்ப்படிந்து துலங்குகின்றனர் இதன் போது அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளும் அனைத்து    விடயங்களை யும் சமூகத்தில் வெளிப்படுத்தும் பிராணியாக உருவாகின்றான். அதனால் ஒவ்வொரு ஆசிரியரும் தம் மாணவரிடத்தில் சிறந்த உளநேயப்பண்புகளை வெளிப்படுத்தும் போது சமூப்பிராணியான மாணவனிடமும் சிறந்த பண்புகளையே வெளிப்படுகின்றது. முன்மாதிரியாக செயற்படும்போது மாணவர் மத்தியில் தலைமைத்துவத்தை விருத்தி செய்கின்றார்.

ஒவ்வொரு நொடியும் கற்றுக்கொண்டு தம் மாணவர்களை வழிப்படுத்துபவர் ஆசிரியராவார். மாணவர்களின் தொலைநோக்கு மற்றும் அவர்களின் இலக்கினை நோக்கி நகர்த்தும் உந்துதலாகவும் சிறந்த வழிகாட்டியாகவும் திகழுகின்றார். மாணவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி அவர்களின் இலக்குகளை அறிந்து செயற்படும் அகன்ற பார்வை கொண்ட ஒருவராக காணப்படுவதனால் மாணவர்களின் தேவையறிந்து கற்றல் கற்பித்தலில் ஈடுபடுவதுடன் மாணவர்களினது அடைவ மட்டத்தினை உயரத்திக் கொள்ளவும் முடிகின்றது. இது சிறந்ததொரு தலைமைத்துவத்தினை மாணவர்களின் மத்தியில் தோற்றிவிக்க வழிகுக்கின்றது. சிறந்த வழிகாட்டுதலும் கலந்துரையாடலும் நேரிய மனப்பான்மையை தோற்றிவிக்கின்றது.

தலமைத்துவக்குழுக்கள் என்பது பொறுப்புக்களை வழங்கி அவற்றினை திறம்பட மேற்கொள்வதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அமைக்கப்படுகின்ற குழுக்கலாகும். இவ் வகையான குழுக்கள் பாடசாலையில் போதியளவு காணப்படுகின்றது. 


 பாடசாலையில் ஆசிரியரின் தலைமைத்துவ வகிபாகம்

உதாரணமாக விளையாட்டு, சாரணியம், செஞ்சிலுலை சங்கம், மாணவ தலைவர்கள், வகுப்பறை தலைவர், சுற்றாடல் குழு, அனர்த்த முகமைத்துவக்குழு என பல்வேறுபட்ட குழக்கள் பாடசாலைகளில் காணப்படுகின்றது. இவ்வாறான குழுக்களில் மாணவர்களை செயற்படுத்தும் போது தாமாக தலைமைத்துவத்தினை பெற்றுக்கொள்கின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு மாணவரும் தமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை பொறுப்பாகவும் திறம்படவும் மேற்கொள்கின்றனர். இத்தகைய போக்கு சிறந்த தலைமைத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஒவ்வொருவரும் தத்தமது செயற்பாடுகளுக்கும் பொறுப்புக் கூறும் பண்பு ஒரு சிறந்த தலைமைத்துவமாகும். ஆசிரியர்கள் மாணவருக்கு முன்மாதிரி என்ற வகையில் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு தனது வளர்ச்சி, வீழ்ச்சி போக்குகளை ஆராய்ந்து சாதனைகளை ஈட்டுவதற்கு உபாயங்களை கண்டறிவது அவசியமாகின்றது. மற்றவர்கள் மீது தனது தோல்வியை நியாயப்படுத்தாமல் தனே தனது செயல்களுக்கு பொறுப்பேற்றல் மாணவர் மத்தியிலும் ஏனையோர் மத்தியிலும் தலைமைத்துப் பண்பினை எடுத்துக் காட்;டுவதாக அமைகின்றது.

முன்வருமாற்றல் ஒவ்வொரு அசிரியரிடமும் காணப்பட வேண்டியது முக்கியமாகும். தற்காலத்தில் சில ஆசிரியர்களிடம் இதனை அவதானிக்க முடிவதில்லை. அவ்வாறான நிலை பல மாணவர் மத்தியிலும் காணப்படுகின்றது. உதாரணமாக காலைக்கூட்டத்pன் போது ஆசிரியரால் வழங்கப்படுகின்ற நற்சிந்தனையினை குறிப்பிடலாம்.

இச் செயற்பாட்டில் சில ஆசிரியர்கள் கலந்து கொள்வதில் ஈடுபாடு கொள்வதில்லை இதனை அவதானிக்கும் மாணவர்களும் இச் செயற்பாட்டில் ஈடுபடுவதில்லை. தலைமைத்துவத்தின் பண்பான முன்வரும் திறன் ஆசிரயரிடமும் மாணவரிடமும் விருத்தியடையாமையே காரணமாகும். மாணவருக்கு ஆசிரியர் முன்மாதிரியாக தொழிற்படும்போது பிள்ளைகளிடமும் முன்வரும் திறனை விருத்தியடையச் செய்ய முடியும்.

ஆசிரியர் எப்போதும் தனது பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டுவது தவிர்க்க வேண்டிய முக்கிய பண்பாகும்.

பாரபட்சம் கொள்ளும் போது வேறுபாடு பார்த்தல், பிரித்து பார்த்தல் போன்ற மிருக குணங்கள் மாணவர்களின் மத்தியில் பாரிய பிளவுகளை தோற்றிவிப்பதாக அமைந்துவிடும். மாணவர்கள் எப்போதும் ஒழுங்குணர்வுடனும், ஒத்துழைப்புடனும் செற்பட வேண்டும். மாணவர்களின் ஒழுக்க நெறியினை தீர்மானிப்பதில் ஆசிரியரின் மனோநிலையானது மாணவர்களை பொருததப்பாடடையச் செய்கின்றது. நல்ல நடத்தைகளை மாணவர்களுக்கு வெளிப்படுத்துவது வெற்றிகரமான துலங்களுக்கு தூண்டலாக அமையும்.

மனித வாழ்வில் வகைகூறும் பண்பானது மிகவும் சிறந்ததொன்றாகும் வகைகூறுதல் என்பது தன்னால் ஆற்றப்படும் கருமங்களுக்கு தாமே பொறுப்புக் கூறுகின்ற தன்மையாகும். ஆசிரியர் தினந்தோறும் வகுப்பறையிலும், வகுப்பறைக்கு வெளியேயும் பல கருமங்களை ஆற்றுகின்றனர். இவ்வாறு ஆற்றும் கருமங்களுக்கு தானே பொறுப்புக்கூறும் தலைமைத்துவத்தின் பொறுப்புணர்வினை வெளிப்படுத்துகின்றது. 

சிறந்த தலைவரின் பண்பு தாமே இறுதித் தீர்தானத்தினை எடுப்பதாகும்.  ஒரு நிறுவனத்தின தலைவர் தாமாக சிந்தித்து ஏனையோருடன் கலந்துரையாடி தனது இறுதித் தீர்மானத்தினை முன்வைத்தல் சிறப்பாக தலைமைத்துவ பண்பாகின்றது. அவ்வாறு பாடசாலையிலும் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு பொருத்தமானவற்றை தாமாக சிந்தித்து முடிவெடுத்து அதனை திறம்பட செய்தல் அவரின் உயரிய நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. 

தலைவரானவர் சுய சிந்தனையில் முடிவெடுப்பது அவரின் தலைமைத்துவத்தின் சக்தியை வெளிகாட்டி நிற்கும். ஆசிரியரானவர் தனது தேவைகளுக்கு பிறரை நாடாது தாமாக முடிவினை எடுப்பது தலைமைத்துவம் மிகுந்த ஆசிரியர் என்பதனை வெளிப்படுத்தும்.


சமூக பிரஜையாக ஆசிரியர் தொழிற்படும் போது சமூக நன்மையினை நோக்காக கொண்டே தொழிற்படுவார். சமூகப் பிரஜை எனும் போது தனது விருப்பு வெறுப்புக்களை  விடுத்து சமூக நலனை நோக்காக கொண்டு செயற்படுபவர்களையே குறிப்பிடப்படுகின்றது. 

அந்தவகையில் ஆசிரியர் பல சமூகங்கள் ஒன்றினையும் நிறுவனத்தலில் பணியாற்றுகின்றவர் என்றதனடிப்படையில் மாணவர்களிடையே பல்வகைமையை பேணாது அனைவரும் சமம் என்னும் நிலைப்பாட்டுடன் அணுகுவதனால் வேறுபாடற்ற சமத்துவமான சமநிலை தோன்றுகிறது. இவ்வகை தலைமைத்துவம் பாடசாலையினதும், பிள்ளையினதும், சமூகத்தினதும் உயரவிற்கு வழிவகுக்கின்றது.

இவ்வாறாக ஆசிரியரானர் பாடசாலையில் தலைமைத்துவ போக்கினை விருத்தி செய்வதில் பெரும்பங்காற்றுகின்றார். பாடசாலையில் ஆசிரியரின் ஒவ்வொரு நடத்தையும் நடவடிக்கையும் மாணவர்களினது தலைமைத்துவ  பண்பினை வளர்ப்பாததாகவே அமைகின்றது. ஆகையினால் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலைமைத்துவ பண்பானது அடிப்படையானதும் அத்தியாவசியமானதும் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுமில்லை என்பது திண்மமாகும்...


கருத்துரையிடுக

0 கருத்துகள்